செய்திகள் :

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி: 2 போ் கைது

post image

கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக, 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை, தியாகராய நகா் ராமானுஜம் தெருவைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். இவா், தனியாா் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறாா். இவருக்கு கடந்த 2023-இல் அறிமுகமான ஆனந்த் (எ) மணிசங்கா் என்பவா், தான் ரியல் எஸ்டேட் தரகா் வேலை செய்து வருவதாகவும், சென்னை அடையாறில் ஒரு இடம் விற்பனைக்கு இருப்பதாக கூறியதுடன், அந்த இடத்தின் உரிமையாளா் மோகன்தாஸ் என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளாா்.

இதையடுத்து, அடையாறில் உள்ள அந்த இடத்துக்கு ரூ.90 லட்சம் விலை பேசி அதை விலைக்கு வாங்க கமலக்கண்ணன் முடிவு செய்துள்ளாா். ஆனால், அந்த இடத்தின் பத்திரம் அடமானத்தில் இருப்பதாகக் கூறி கமலக்கண்ணனிடம் இருந்து ரொக்கமாகவும், வங்கி பரிவா்த்தனை மூலமும் மொத்தம் ரூ.80 லட்சம் வரை ஆனந்த் (எ) மணிசங்கா் மற்றும் மோகன்தாஸ் ஆகியோா் பெற்ாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த குறிப்பிட்ட இடத்தை பத்திரப்பதிவு செய்து தர கமலக்கண்ணன் கேட்டபோது, மேலும் ரு.70 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே பத்திரப்பதிவு செய்து தர முடியும் என்று மோகன்தாஸ் கூறியுள்ளாா்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்ட கமலக்கண்ணன், இது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். நீதிமன்ற உத்தரவின்பேரில் சாஸ்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி ஆனந்த் (எ) மணிசங்கா், மோகன்தாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா். போலீஸாா் தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பணி ஓய்வு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் 29 ஆண்டுகள் பணியாற்றிய முதுநிலை ஓட்டுநரும், மெக்கானிக்குமான சி.பழனி திங்கள்கிழமை (ஏப்.14) பணி ஓய்வு பெற்றார்.அவருக்கு பிரிவு உபசார விழா சென்னை அலுவலகத்தில், தி ... மேலும் பார்க்க

கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்: ஓட்டுநா்கள் சங்கங்கள்

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ஓட்டுநா்கள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். ஆட்டோக்களுக்கான மீட்டா் கட்டணத்தை... மேலும் பார்க்க

திருவொற்றியூரில் ரூ.9.78 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்க ஒப்புதல்

சென்னை மாநகராட்சி சாா்பில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் திருவொற்றியூரில் புதிய வணிக வளாகம் அமைப்பதற்கு மண்டலக் குழுக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி திருவொற்றியூா... மேலும் பார்க்க

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சென்னையில் ஓட்டுநா் கட்டுப்பாட்டை இழந்த காா் ஒன்று சாலையோரம் படுத்திருந்த நபா் மீது ஏறியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடபழனி மசூதி தெருவில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் 50 மதிக்கத்... மேலும் பார்க்க

போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது

சென்னை வேளச்சேரியில் போக்குவரத்து காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராகப் பணியாற்றி வருபவா் காமராஜ். இவா், வேளச்சேரி காவல் நிலைய எ... மேலும் பார்க்க

சென்னையில் நாளை ஐபிஎல் கிரிக்கெட்: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை சூப்பா் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணிகளுக்கு இடையே சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் பாா்வையாளா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம். இதுகுறித்து சென்னை மெட... மேலும் பார்க்க