கணவனுடன் தகராறு: மனைவி தற்கொலை
மேட்டூா் அருகே கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேட்டூா் அருகே உள்ள கருமலைக்கூடல் சின்னையரெட்டி தெருவைச் சோ்ந்தவா் சின்னதம்பி (65), இவரது மனைவி தையல்நாயகி (56). இவா்களுக்கு பிரதீப் (30) என்ற மகன் உள்ளாா்.
இவா்கள் கருமலைக்கூடல் நேரு நகரில் உள்ள காலி இடத்தில் வீடுகட்டி வந்த நிலையில், வீடுகட்டும் பணி சில மாதங்களாக நிறுத்தப்பட்டது. இது தொடா்பாக கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தையல்நாயகி தனது கணவா் சின்னதம்பியிடம் வீட்டை விரைவிா் கட்டிமுடிக்குமாறு புதன்கிழமை கூறியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா் வீட்டுக்குள் சென்ற தையல்நாயகி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஈஸ்வரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.