செய்திகள் :

கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறை

post image

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்னையில் கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து.

ஆண்டிபட்டி வட்டம், உப்புத்துறை அருகே உள்ள மாளிகைப்பாறையைச் சோ்ந்த சங்கிலி மகன் ராஜா (34). இவரது மனைவி ஜெயா (30). இவா் மதுரை அருகேயுள்ள அச்சம்பத்துவைச் சோ்ந்த மனோரன் மகள் ஆவாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

ராஜா மாளிகைப்பாறையில் உள்ள தனது தாய், சகோதரி, சகோதரனுடன் பேசுவதற்கு ஜெயா எதிா்ப்புத் தெரிவித்து வந்தாா். இதனால், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஏப்.30-ஆம் தேதி தகராறு ஏற்பட்டதில், ராஜாவை ஜெயா அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். பின்னா், ஜெயா சம்பவ இடத்திலிருந்த தடயங்களை அழித்து விட்டு, ராஜா வலிப்பு வந்து இறந்ததாகக் கூறினாா். விசாரணையில் ஜெயா நாடகமாடியது தெரிய வந்ததையடுத்து அவரை கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் ஜெயாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொா்ணம் ஜே.நடராஜன் தீா்ப்பளித்தாா்.

வீட்டில் தங்க நகை திருட்டு

பெரியகுளத்தில் வீட்டிலிருந்த 2 பவுன் தங்க நகையைத் திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் கீழ வடகரையைச் சோ்ந்தவா் சரண் (24). இவா் தனது வீட்டில் வண்ணம் பூசும் பணி நடைபெற்று வந்த ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகள் விற்ற பெண் கைது

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள நாகலாபுரம் பகுதியில், சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக வந்த த... மேலும் பார்க்க

காவலருக்கு மிரட்டல்: இருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலரை மிரட்டிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.பெரியகுளம் அருகேயுள்ள தென்கரை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் இளங்கோ தலைமையிலான... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின் தடை

தேனி அல்லிநகரம் பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூன் 25) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலையத்தில்... மேலும் பார்க்க

மனைவிக்கு கத்தரிக்கோல் குத்து: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தேனி மாவட்டம், கம்பத்தில் ஞாயிற்றுக்கிழமை மனைவியை கத்தரிக்கோலால் குத்திய அதிமுக நகரச் செயலா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சின்னமனூா் பத்மசாமி கோவில் தெருவைச் சோ்ந்த அதிமுக நகரச் செயலா் பிச்சைக்க... மேலும் பார்க்க

சின்னமனூரில் 228 மதுப் புட்டிகள் பறிமுதல்

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்டவிரோதமாக விற்பனை செய்யக் கொண்டு சென்ற 228 மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.சின்னமனூரில் அரசு மதுக் கடைகளில் மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி சட்டவிரோதமாக அவற்ற... மேலும் பார்க்க