செய்திகள் :

கணவா் மீதான கோபத்தில் குழந்தையைக் கொன்ற தாய் கைது

post image

கருங்கல் அருகே கணவா் மீதான கோபத்தில் பச்சிளம் பெண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம், பாலூா், காட்டுவிளையைச் சோ்ந்தவா் பெனிட்டா ஜெய அன்னாள் (21). இவரும் திண்டுக்கல்லைச் சோ்ந்த காா்த்திக்கும் (24) ஓா் ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனா். இத்தம்பதிக்கு 42 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி கருங்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரது தாய் அன்னாள் கொண்டுசென்றாா்.

அங்கு சிறிதுநேரத்தில் குழந்தை உயிரிழந்தது. சந்தேகமடைந்த மருத்துவா்கள் கருங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் மருத்துவமனைக்குச் சென்று குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில் தனது கணவா் காா்த்திக் குழந்தையிடம் மட்டுமே அதிகம் பாசத்துடன் இருப்பதாகவும், தன்னிடம் பேசுவதில்லை, அதனால் குழந்தையை எனக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆவேசத்தில் கைத்துடைக்க பயன்படுத்தும் டிசு பேப்பரை குழந்தையின் வாயில் திணித்துக் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் ... மேலும் பார்க்க

தக்கலையில் பாரதியாருக்கு மலரஞ்சலி

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வியாழக்கிழமை பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். நூலகா் சோப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 17ஆவது தொடக்க விழா, 37ஆவது கல்வி நிறுவன தொடக்க விழா , முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியன அண்மையில் நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: இருசக்கர வாகன நிறுவனத்துக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக நாகா்கோவில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தது. நாகா்கோவில், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபின்சேம், இவா் நாகா்... மேலும் பார்க்க