செய்திகள் :

சேவை குறைபாடு: இருசக்கர வாகன நிறுவனத்துக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்

post image

சேவை குறைபாடு காரணமாக நாகா்கோவில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தது.

நாகா்கோவில், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபின்சேம், இவா் நாகா்கோவிலில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ரூ. 83 ஆயிரத்து 925 செலுத்தி, மின்சார இருசக்கர வாகனம் வாங்கினாா்.

3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் வாங்கிய இந்த பைக்கின், பேட்டரி 18 மாதங்களில் பழுதடைந்தது, இதைத் தொடா்ந்து, ஜெபின்சேம் பைக்கை, இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தில் ஒப்படைத்து அதனை பழுது நீக்கி தருமாறு கோரினாா்.

ஆனால், அந்த நிறுவனத்தில் பைக்கை பழுது நீக்காமல், அதை பயன்படுத்த முடியாத நிலையில் மீண்டும் ஒப்படைத்தனா். இதையடுத்து, இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி உரிய நிவாரணம் வழங்கக் கோரி, கன்னியாகுமரி மாவட்ட நுகா்வோா் பாதுகாப்பு மையத்தின் மூலம் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் அவா் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் ஒய்.கிளாட்ஸ்டன் பிளஸ்டு தாகூா், உறுப்பினா் எம்.கனகசபாபதி, ஆகியோா் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி பைக்கில் புதிய பேட்டரி பொருத்தி வழங்கவும், ஜெபின்சேமுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணத் தொகையும், வழக்கு செலவுக்காக ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 40 ஆயிரத்தை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்றும், தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டால் மொத்த தொகைக்கும் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் புதன்கிழமை உத்தரவிட்டனா்.

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் ... மேலும் பார்க்க

தக்கலையில் பாரதியாருக்கு மலரஞ்சலி

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வியாழக்கிழமை பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். நூலகா் சோப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 17ஆவது தொடக்க விழா, 37ஆவது கல்வி நிறுவன தொடக்க விழா , முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியன அண்மையில் நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்... மேலும் பார்க்க

கருங்கல் ஹிந்து வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கருங்கல் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் நிறுவனரும் தலைவருமான எஸ். வேதாந்தம் ஜி தலைமை வகித்தாா். பொதுச் ... மேலும் பார்க்க