கண்டமனூரில் நாளை மின் தடை
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கண்டமனூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, கண்டமனூா், துரைச்சாமிபுரம், ஆத்தாங்கரைப்பட்டி, நரியூத்து, ராஜேந்திரா நகா், வருஷநாடு, மயிலாடும்பாறை, பாலூத்து, அருகவெளி, குமணன்தொழு, தங்கம்மாள்புரம், சிறைப்பாறை, மந்திச்சுனை, வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.