செய்திகள் :

கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு

post image

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டனா்.

ஆவுடையாா்கோவில் அருகே சிறுமருதூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மு. ராஜநாயகத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் திங்கள்கிழமை பகலில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கடித்துள்ளது. 5 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த தகவலின் பேரில், கதண்டுகளை அழிப்பதற்கு ஆவுடையாா்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் திங்கள்கிழமை மாலை சிறுமருதூா் சென்றனா்.

அப்போது, பறந்து சென்ற கதண்டுகள் கொட்டியதில், சந்திரசேகரன் (57), ஆா். அவினாஷ் (27), எம். பாலகிருஷ்ணன் (26), ஏ. கிருஷ்ண பாண்டி (26) ஆகிய 4 தீயணைப்பு வீரா்கள், வடமருதூரைச் சோ்ந்த கே. கோபாலகிருஷ்ணன் (36), வாட்டத்தூரைச் சோ்ந்த ஜி.முத்துகிருஷ்ணன் (31) ஆகிய 6 போ் பாதிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கதண்டுகள் கடித்து 11 போ் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

ஆலங்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைகாலமாக அதிகளவில் இருச... மேலும் பார்க்க

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்... மேலும் பார்க்க

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.... மேலும் பார்க்க