செய்திகள் :

கத்தாரில் தாக்குதல்! அரபு நாடுகளையும் குறிவைக்கிறதா இஸ்ரேல்?

post image

காஸாவில் நீடிக்கும் சண்டையைத் தொடர்ந்து, கத்தார் தலைநகரில் எவ்வித முன்னறிவிப்புமின்றி செவ்வாய்க்கிழமை(செப். 9) இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

கத்தார் தலைநகர் தோஹாவில் செப். 9 வான் வழியாக தீவிர தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. தோஹாவில் ஹமாஸ் படையின் அரசியல் பிரிவு தலைமை நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்பு கட்டடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான் வழியாக திடீரென தாக்குதல் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து, கத்தார் மக்களின் பாதுகாப்புக்கு இஸ்ரேல் படைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக எதிர்வினையாற்றிய கத்தார் அரசு இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை(செப். 9) நள்ளிரவில் அமெரிக்கா தரப்பிலிருந்து அளிக்கப்பட்டதொரு விளக்கத்தில், அமெரிக்காவுக்கு முன்கூட்டியே இத்தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுவிட்டதாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் கரோலின் லியாவிட் தெரிவித்து சர்வதேச சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்த தவறவில்லை.

இந்த நிலையில், அடுத்தகட்டமாக அரபு நாடுகளுக்கு எதிராகவும் இஸ்ரேல் திரும்புகிறதா? என்பதற்கு இஸ்ரேல் தரப்பிலிருந்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அவைக்கான இஸ்ரேலின் தூதர் பேசுகையில், கத்தாரில் ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கையானது சரியான முடிவே என்று வாதிட்டுள்ளார்.

அவர் பேசுகையில், “இந்தத் தாக்குதலானது கத்தார் மீதான தாக்குதல் அல்ல. ஹமாஸ் மீதான தாக்குதலே. நாங்கள்(இஸ்ரேல்) கத்தாருக்கு எதிரானவர்கள் அல்ல, அதுபோல, எந்தவொரு அரபு தேசத்துக்கும் எதிரானவர்கள் அல்ல, நாங்கள் தற்போதையை சூழலில் ஒரு பயங்கரவாத அமைப்புக்கு(ஹமாஸ் படை) எதிராகவே செயல்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Israel's UN envoy has defended targeting Hamas leaders in Qatar as the "right" decision, after the strikes on the US ally's soil drew a rare rebuke from President Donald Trump.

இஸ்ரேல் தாக்குதல்: கத்தார் விரைந்தார் அமீரக அதிபர்!

கத்தார் நாட்டின் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் அந்நாட்டுக்கு நட்பு ரீதியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கத்தார் தலைநகர் தோஹாவில், நேற்று (... மேலும் பார்க்க

நேபாளத்தில் 13,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்!

நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளிலிருந்து 13,000-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்... மேலும் பார்க்க

நேபாள பயணத்தை கூடுதல் கட்டணமின்றி மாற்றியமைத்துக்கொள்ளலாம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

நேபாளத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. செப். 17 வரை நேபாளத்தில் இருந்து இந்தியா வருவதற்கோ அல்லது இந்தியாவில் இருந்து நேபாளம்... மேலும் பார்க்க

நேபாளத்தின் இடைக்கால அரசை வழிநடத்தும் தலைவராகிறார் முதல் பெண் தலைமை நீதிபதி !

போராட்டத்தால் சிதைந்து போன நேபாளத்தில் இடைக்கால அரசை வழிநடத்த புதியதொரு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அண... மேலும் பார்க்க

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு 79-இல் நீதி கிடைத்தது..!

19 வயதில் பாலியல் வன்கொடுமை இழைக்கப்பட்ட பெண்ணுக்கு அவரது 79-ஆவது வயதில் நீதி கிடைத்ததை பெண் சமூகம் கொண்டாடி வருகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் பதிவானதொரு பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்மண... மேலும் பார்க்க

நேபாள ஆணிவேர் சிங்கா மாளிகை தீக்கிரை! ஜென் ஸி கோபத்தின் விலை! தொடர்ந்து வந்த துயரம்!!

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்திருந்த சிங்கா அரண்மனை எனப்படும் அரசு மாளிகை, ஜென் ஸி இளைஞர்களின் கலவரத்தில், தீக்கிரையானது.ஆசியாவின் மிகப்பெரிய அரண்மனையை காவுவாங்கிவிட்டு, அதுபற்றி எரியும்... மேலும் பார்க்க