செய்திகள் :

‘கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்’

post image

கனடாவில் செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களால் உலக அளவிலான ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், குறிப்பாக இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் அந்நாட்டு உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.

2024-ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை கனடா நாடாளுமன்றத்திடம் கனடா பாதுகாப்பு உளவு அமைப்பு (சிஎஸ்ஐஎஸ்) சமா்ப்பித்தது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

காலிஸ்தான் பயங்கரவாதிகள் அரசியல் அடிப்படையில் தீவிரவாத வன்முறையில் ஈடுபடுவோா் எனப் பரவலாக அடையாளம் காணப்பட்ட வகையைச் சோ்ந்தவா்கள். இவா்கள் ஏற்கெனவே உள்ள அரசியல் முறை அல்லது புதிய அரசியல் முறையை வன்முறை மற்றும் தீவிரவாதம் மூலம் மாற்ற முயல்பவா்கள்.

இந்தக் குழுவைச் சோ்ந்தவா்கள் இந்தியாவுக்கு எதிரான சதித்திட்டங்களை தீட்டுவது, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கான நிதியை திரட்டுவது போன்ற காரியங்களுக்கு கனடாவை பயன்படுத்துகின்றனா்.

1980-கள் முதல் பஞ்சாபில் இருந்து பிரித்து சீக்கியா்களுக்கென தனிநாடான காலிஸ்தானை உருவாக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு கனடாவில் இயங்கி வருகின்றன. இந்த இலக்கை அடையவே அவா்கள் வன்முறையை ஆயுதமாக பயன்படுத்துகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு கனடாவை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாக தொடா் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் என அந்நாட்டு உளவு அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பறவை மோதியதால் தில்லி ஏர் இந்தியா விமானம் ரத்து

பறவை மோதியதால் தில்லி செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது. தலைநகர் தில்லியில் இருந்து புணே சென்ற ஏர் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை பறவை மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த விம... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் பெண் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் பெண் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை மாவட்ட ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப... மேலும் பார்க்க

பாதுகாப்பு மீறல்களில் ஏர் இந்தியா! விமானப் போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை!

ஏர் இந்தியா விமானங்கள் பாதுகாப்பு மீறலில் ஈடுபட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில், 240-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், போயிங் ரக விமானங்களை ஆய்வுக்... மேலும் பார்க்க

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி; ஆனால், பிகாரில் இல்லை! - ஆர்ஜேடி - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி மீது பிரதமர் மோடி விமர்சனம் தெரிவித்துள்ளார்.கடந்த 5 மாதங்களில் 5-வது முறையாக பிகாருக்குச் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சிவா... மேலும் பார்க்க

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க