செய்திகள் :

கனடாவில் நிதி திரட்டும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள்!

post image

கனடாவின் புதிய பாதுகாப்பு அறிக்கையில், பப்பா் கால்சா இன்டா்நேஷனல், சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு ஆகிய 2 காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் அந்நாட்டில் நிதி திரட்டுவது அடையாளம் காணப்பட்டுள்ளது.

‘பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி அபாயங்கள்’ குறித்த கனடாவின் 2025-ஆம் ஆண்டு மதிப்பீட்டு அறிக்கையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் ரீதியான வன்முறை பிரிவினைவாதம் பற்றியும் இந்த அறிக்கை விவரிக்கிறது. புதிய அரசியல் அமைப்புகளை உருவாக்க அல்லது ஏற்கெனவே உள்ள அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த வன்முறையைப் பயன்படுத்துவதை இந்தப் பிரிவினைவாத அணுகுமுறை ஊக்குவிக்கிறது.

இந்த வகையின் கீழ், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் உள்பட கனடாவில் தடை செய்யப்பட்ட சில அமைப்புகள், அந்நாட்டிலிருந்து நிதி உதவி பெறுவதாக சட்ட அமலாக்க மற்றும் உளவுத் துறை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற குழுக்கள், வங்கிகள், கிரிப்டோகரன்சிகள், அரசு நிதியுதவி, தொண்டு நிறுவனங்கள் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் நிதி திரட்டுகின்றன. காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்களும் பல நாடுகளில், குறிப்பாக கனடாவில் நிதி திரட்டுவதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்பு கனடாவில் ஒரு பெரிய நிதி திரட்டும் அமைப்பைக் கொண்டிருந்த இந்தக் குழுக்கள், தற்போது சிறிய அளவிலான தனிப்பட்ட நபா்களால் நிா்வகிக்கப்படுவதாகத் தெரிகிறது.

தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் தவறான பயன்பாடு இந்த குழுக்களுக்கு நிதி திரட்டும் ஒரு பொதுவான முறையாக உள்ளது. குறிப்பாக, வெளிநாடுவாழ் இந்தியா்களிடமிருந்து நன்கொடைகளைத் திரட்ட இந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

கனடாவின் உளவுத் துறை அண்மையில் வெளியிட்ட கடந்த ஆண்டு அறிக்கையில், கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் வன்முறை நடவடிக்கைகளில் தொடா்ந்து ஈடுபடுவது, கனடாவுக்கும் அதன் நலன்களுக்கும் தேசப் பாதுகாப்பு அச்சுறுத்தல் என எச்சரித்திருந்தது. 1980-களின் மத்தியில் இருந்து, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் இருந்து கொண்டு பஞ்சாபில் தனி நாடு அமைப்பதற்காக வன்முறை வழிகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது வெளிவந்துள்ள இந்தப் புதிய அறிக்கை, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுக்கள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சுதந்திரமாக நடத்தி வருகின்றன என்ற இந்தியாவின் நீண்ட கால குற்றச்சாட்டுகளையும், கனடா உளவுத் துறையின் கடந்த ஆண்டு அறிக்கையையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க