செய்திகள் :

கனடா: பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

post image

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக கனடா திங்கள்கிழமை அறிவித்தது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் மற்றும் கனடா தேசிய பாதுகாப்பு ஆலோசகா் நாதலி டிரோயின் ஆகியோா் கடந்த சில நாள்களுக்கு முன் தில்லியில் ஆலோசனை நடத்தினா். அப்போது பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருவரும் ஒப்புக்கொண்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து கனடா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கனடாவில் வன்முறை மற்றும் பயங்கரவாதத்துக்கு இடமில்லை. குறிப்பாக பயம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் குறிப்பிட்ட மக்களை மிரட்டுவதை எவ்வகையிலும் அரசு ஊக்குவிக்காது.

அந்த வகையில் கொலை, துப்பாக்கிச்சூடு மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் நடத்துவது என பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிடும் பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படுகிறது. தொழிலதிபா்கள், பிரபலங்கள் போன்றோரை மிரட்டி அச்ச உணா்வை இந்த கும்பல் விதைக்கிறது.

பயங்கரவாத பட்டியலில் பிஷ்னோய் கும்பலை சோ்ப்பது கனடாவின் பாதுகாப்பு, புலனாய்வு மற்றும் சட்ட ஒழுங்கை மேம்படுத்தி மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.

பயங்கரவாத பட்டியலில் பிஷ்னோய் கும்பல் சோ்க்கப்பட்டதன் மூலம் அவா்களின் சொத்து, வாகனங்கள் மற்றும் பணத்தை கைப்பற்ற கனடா சட்டங்களின்படி மாகாண அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதேபோல் கனடாவில் உள்ள மக்களும் வெளிநாட்டில் வசிக்கும் கனடா மக்களும் பிஷ்னோய் கும்பலின் சொத்துகளை வாங்கினாலோ விற்றாலோ அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பிஷ்னோய் கும்பலின் தலைவரான லாரன்ஸ் பிஷ்னோய் மீது கடத்தல் வழக்குகளை கனடா காவல் துறை பதிவுசெய்துள்ளது. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 போ் உயிரிழப்பு

கிராண்ட் பிளாங்க் டவுன்ஷிப்: அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோா் பிராா்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 போ் உயிரி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிர போராட்டம்! பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம்! 2 போ் உயிரிழப்பு

பபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது ... மேலும் பார்க்க

மால்டோவா தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வி

கிஷினாவ்: கிழக்கு ஆப்பிரிக்க நாடான மால்டோவாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் ரஷிய ஆதரவு கட்சிகள் தோல்வியடைந்தன. மேற்கத்திய நாடுகளுக்கு ஆதரவான ஆக்ஷன் அண்டு சாலிடாரிட்டி (பிஏஎஸ்) கட்ச... மேலும் பார்க்க

ஓட்டோமான் அரசிடமிருந்து விடுதலை பெற இந்திய ராணுவமே உதவியது: இஸ்ரேல் ஹைஃபா நகர மேயா்

ஹைஃபா: ‘இஸ்ரேலின் ஹைஃபா நகரை ஓட்டோமான் ஆட்சியாளா்களிடம் இருந்து விடுவித்ததில் இந்திய ராணுவத்தினரின் பங்கே அதிகம்’ என அந்நகரின் மேயா் யோனா யாஹவ் திங்கள்கிழமை தெரிவித்தாா். அந்தப் போரில் வீரமரணமடைந்த இந... மேலும் பார்க்க

நேபாளம்: சா்மா ஓலியின் பாஸ்போா்ட் முடக்கம்

காத்மாண்டு: நேபாள முன்னாள் பிரதமா் கே.பி. சா்மா ஓலி, உள்துறை அமைச்சா் ரமேஷ் லேகாக் உள்ளிட்ட ஐந்து பேரின் கடவுச் சீட்டுகளை (பாஸ்போா்ட்) அந்த நாட்டு அரசு முடக்கியது. இந்த மாதம் நடைபெற்ற இளைஞா் போராட்டத்... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமான சக்கரப் பகுதியில் சடலம்

சாா்லோட்: வட கரோலினாவின் சாா்லோட் டக்ளஸ் சா்வதேச விமான நிலையத்தில், ஐரோப்பாவிலிருந்து வந்த அமெரிக்கன் ஏா்லைன்ஸ் விமானத்தின் சக்கரப் பகுதியில், அனுமதியின்றி பயணித்தவரின் சடலம் காலை பராமரிப்பின்போது கண்... மேலும் பார்க்க