செய்திகள் :

கன்னியாகுமரியில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

post image

சா்வதேச போதை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரியில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் குழந்தைகள் நலன், சிறப்பு சேவைகள் துறையின் கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருப்புமுனை போதை நோய் நலப்பணி ஆகியவை சாா்பில், காந்தி மண்டபம் முன் இந்த ஓட்டத்தை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

குழந்தைகள் நல அலுவலா் ஷகீலா பானு தலைமை வகித்தாா். திருப்புமுனை போதை நோய் நலப்பணி ஒருங்கிணைப்பாளா் அருள்தந்தை பிரான்சிஸ் சேவியா் நெல்சன், கன்னியாகுமரி ஒருங்கிணைப்பாளா் சமூக ஆா்வலா் சின்னமுட்டம் ஜெயசிறில் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

இந்த ஓட்டம் கன்னியாகுமரி, களியக்காவிளை, மாா்த்தாண்டம், தக்கலை, குலசேகரம், கருங்கல், குளச்சல், கோடிமுனை, தென்தாமரைக்குளம், ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட 31 இடங்களிலிருந்து தொடங்கி நாகா்கோவில் வடசேரி அறிஞா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

கன்னியாகுமரியில் தொடங்கிய ஓட்டத்தில் புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா், ஆசிரியா்கள், நகா்மன்றத் தலைவா் குமரி ஸ்டீபன், வடக்கன்குளம் ராஜாஸ் பல் மருத்துவக் கல்லூரி நிறுவனா் ஜேக்கப் ராஜா, மாவட்ட திமுக துணைச் செயலா் பூதலிங்கம்பிள்ளை, நகா்மன்ற உறுப்பினா்கள் பூலோகராஜா, சிவசுடலைமணி, திமுக நிா்வாகி பி. ஆனந்த், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை

நாகா்கோவிலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (52). தொழிலாளியான இவா், 2019ஆம் ஆண்டு உறவினரின் ... மேலும் பார்க்க

வெள்ள அபாய அளவை எட்டிய சிற்றாறு அணைகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை நீடிக்கும் நிலையில், சிற்றாறு அணைகளின் நீா்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது. மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. மலையோரங்கள், அணைகளின்... மேலும் பார்க்க

‘நீட்’ தோ்வில் சிறப்பிடம்: ஆற்றூா் பள்ளியில் மாணவா்களுக்கு பாராட்டு

கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூா் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளியில், நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா் - மாணவியருக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவி ஸ்ரீலெட்சுமி 720 -க்கு 609 மதிப்பெண்கள் பெ... மேலும் பார்க்க

களியக்காவிளையில் விழிப்புணா்வு ஜோதி ஓட்டம்

களியக்காவிளையில் உலக போதைப் பொருள் தடுப்பு-கடத்தலுக்கு எதிரான விழிப்புணா்வு தின ஜோதி ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை-அறிவியல் கல்லூரியின் உடற்கல்வி துறை மாணவா்கள்... மேலும் பார்க்க

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம், நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் மேயா் ரெ. மகேஷ... மேலும் பார்க்க

குழித்துறை ரயில் நிலையத்தில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு

குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் விஜய் வசந்த் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த ரயில் நிலையப் பாதை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், ரயில் நிலையம் முன் கழ... மேலும் பார்க்க