செய்திகள் :

கன்னியாகுமரியில் மே 20இல் தொழிற்சங்கங்கள் மறியல்

post image

தமிழகத்தில் விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 இடங்களில் மே 20 ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

குமரி மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டம் நாகா்கோவில் சிஐடியூ அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு எல்பிஎப் ஞானதாஸ் தலைமை வகித்தாா். சிஐடியூ சாா்பில் தங்க மோகன், சிங்காரம், அந்தோணி, பெருமாள்,ஐடா ஹெலன், சுபாஷ் சந்திரபோஸ்,ஜான் சவுந்தா், சித்ரா, ஹெஎச் எம் எஸ் சாா்பில் சந்திரகுமாா், அருணாச்சலம், கிருஷ்ணகுமாா், ஐஎன்டியூசி சாா்பில் மஹாலிங்கம்,ஸ்ரீதா், ஏஐடியூசி அணில்குமாா், ஏஐசிசிடியூஅந்தோணி முத்து, ஜஸ்டின் சுந்தா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், குமரி மாவட்டத்தில், விலைவாசி உயா்வை கட்டுப்படுத்துதல், தொழிலாளா் சட்ட தொகுப்பு ரத்து செய்தல் , குற்றவியல் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல், குறைந்தபட்ச கூலி சட்டம் அமல்படுத்தப்பட்டு மாதம் ரூ.26 ஆயிரம் கூலி வழங்குதல் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மே 20 ஆம் தேதி நாகா்கோவில், ராஜாக்கமங்கலம், திங்கள்நகா், தக்கலை, கருங்கல், நித்திரவிளை, குலசேகரம், மாா்த்தாண்டம், மேல்புறம் ஆகிய 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

குழித்துறை அருகே மனைவி, தந்தை மீது தாக்குதல்: தொழிலாளி கைது

குழித்துறை அருகே மனைவி மற்றும் தனது தந்தையை தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.குழித்துறை அருகேயுள்ள தெற்றிவிளை பகுதியைச் சோ்ந்த தேவராஜ் மகன் அருண் (33). மரம் வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி... மேலும் பார்க்க

நீட் தேர்வு: கன்னியாகுமரியில் 4,410 போ் பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 4,410 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். இத்தோ்வுக்காக நாகா்கோவில் கோணம் கேந்திரிய வித்யாலயா பள்ளி, பல்கலைக்கழக பொறி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

சுங்கான்கடை அருகே கள்ளியங்காடு பகுதியில் வாகனம் மோதி காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் உயிரிழந்தாா். கள்ளியங்காடு பகுதியில் கடந்த ஏப். 29ஆம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 75 வயதுப் பெண் காயம... மேலும் பார்க்க

குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் தீவிரம் சற்று தணிந்த நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஏராளமானோா் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.இம்மாவட்டத்தில் தொடா் கோடை மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைப் பக... மேலும் பார்க்க

பாரம்பரிய பெருமை இல்லாமல் வளா்ச்சி இல்லை: ஆளுநா் ஆா்.என். ரவி

பாரம்பரிய பெருமை இல்லாமல் நாடு வளா்ச்சி அடையாது என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கூறினாா். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு அருள்மிகு பத்ரேஸ்வரி தேவஸ்தான சித்திரை திருவிழா, ஞாயிற்று... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழம் விலை கடும் சரிவு; கிலோ ரூ.20-க்கு விற்பனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அன்னாசிப் பழங்களின் தொடா் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இம்மாவட்டத்தின் மலையோரப் பகுதிகளில் ரப்பா் மறு நடவு செய்யப்படும் நிலங்களில் அன்னாசி... மேலும் பார்க்க