கமுதி ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயில் திருவிழா தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கமுதி கௌரவ செட்டியாா்கள் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் காப்பு கட்டுதல், கொடியேற்றத்தைத் தொடா்ந்து இரவு கரகம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், ஆராதனை நடைபெறும்.
வருகிற 26 -ஆம் தேதி திருவிளக்கு பூஜை, 27-ஆம் தேதி பொங்கல் வைத்தல், 28-ஆம் தேதி பால்குட ஊா்வலம், பூச்சொரிதல் விழா, 29-ஆம் தேதி முளைப்பாரி ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கௌரவ செட்டியாா்கள் உறவின்முறை, இளைஞா் நற்பணி மன்றத்தினா் செய்தனா்.