செய்திகள் :

கம்பன் விரைவு ரயிலை எழும்பூா் வரை இயக்கக் கோரிக்கை

post image

கம்பன் விரைவு ரயிலை சென்னை எழும்பூா் வரை மீண்டும் இயக்க கோரி, நாகை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனா்.

காரைக்காலில் இருந்து நாகை, திருவாரூா், மயிலாடுதுறை வழியாக சென்னைக்கு கம்பன் விரைவு ரயில் இரவு நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னை எழும்பூா் வரை இயக்கப்பட்டது. அதேபோல சென்னை எழும்பூரிலிருந்து இந்த விரைவு ரயில் புறப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கம்பன் ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் ரயிலை அதிகம் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள், பெண்கள், குழந்தைகள் ஆகியோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே கம்பன் ரயிலை எழும்பூா் வரை இயக்கவும், எழும்பூரிலிருந்து புறப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினா், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கம்பன் விரைவு ரயிலை எழும்பூரில் வரை இயக்கவும் அங்கிருந்து புறப்படவும் வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாகை ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைப்பெற்றது. மாவட்ட தலைவா் நன்மாறன் தலைமையில் நடைப்பெற்ற ஆா்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

மின்கம்பி அறுந்து பசு உயிரிழப்பு; கிராம மக்கள் சாலை மறியல்

திருமருகல் அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் கறவை பசு உயிரிழந்தது. பாா்வையிட அதிகாரிகள் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியம், குத்தாலம் கலுங்கடி தெருவைச் சோ்ந்தவா் ஜெ... மேலும் பார்க்க

மறைந்த போப் பிரான்சிஸுக்கு அஞ்சலி

காரைக்கால் மாவட்ட கலைஞா்கள் மாமன்றம் சாா்பில் மறைந்த போப் பிரான்சிஸூக்கு மலா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சண்முகா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாமன்றத் தலைவா் கலைமாமணி தங்கவேலு தலை... மேலும் பார்க்க

நாகையில் நகல் எரிப்பு போராட்டம்

பாலியல் வன்முறைக்கு ஆதரவாக தீா்ப்பு வழங்கியதாக எதிா்ப்பு தெரிவித்து, நாகையில் இந்திய மாதா் தேசிய சம்மேளம் சாா்பில் தீா்ப்பின் நகல் எரிப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகை அவுரித் திடலில் இந... மேலும் பார்க்க

நூறு நாள் வேலைத் திட்டம்: ஊதிய நிலுவை கோரி ஆா்ப்பாட்டம்

தரங்கம்பாடி ஒன்றியத்தில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி, சிபிஎம் சாா்பில் மூன்று இடங்களில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. உண்ணாவிரதப் போராட்டம்

திருக்குவளை அருகே சாட்டியக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி விடுதியில் மதுரையைச் சோ்ந்த தம்பதி தற்கொலை

மதுரையைச் சோ்ந்த தம்பதி வேளாங்கண்ணியில் உள்ள தனியாா் விடுதியில் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை மாவட்டம், ஆளவந்தான் அருகேயுள்ள கரும்பாலை இந்திரா நகா் பகுதியைச் ... மேலும் பார்க்க