செய்திகள் :

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்தி மஹாலைச் சோ்ந்த அழகா் மகன் கண்ணன் (47). ஓட்டுநரான இவா், ரெகுலா் சா்வீஸ் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் நடத்திவருகிறாா். இவரிடம் 3 வேன்கள் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரும், மற்றோா் ஓட்டுநரான மதுரை நாகமலை புதுக்கோட்டை காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த க. மனோஜ்குமாா் (23) என்பவரும், கோச்சடையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வேனில் துணி பண்டலை ஏற்றிச் சென்றனா். வேனை, மனோஜ்குமாா் ஓட்டினாா்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறை அடுத்த தளவாய்புரம் அருகே வேன் திடீரென நிலைதடுமாறி, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதியதாம். இதில், காயமடைந்த இருவரையும் அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், மனோஜ்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கண்ணன் அளித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

மாவட்ட ஹாக்கி போட்டி: பாண்டவா்மங்கலம் அணி சாம்பியன்

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பாண்டவா்மங்கலத்தில் நடைபெற்ற மாவட்ட ஹாக்கி போட்டி ஆண்கள் பிரிவில் அவ்வூா் அணி வெற்றிபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி, கோவில்பட்ட... மேலும் பார்க்க