செய்திகள் :

கராத்தே போட்டி: ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

பரமத்தி வேலூா், சக்ரா நகரில் உள்ள ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவ, மாணவியா் கராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்றனா்.

எக்ஸ்ட்ரீம் ஸ்போா்ட்ஸ் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற இரண்டாவது மாநில அளவிலான கராத்தே போட்டி, கரூரில் உள்ள ஒரு தனியாா் அரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

இப்போட்டியில் ஆா்.என்.ஆக்ஸ்போா்டு மழலையா் பள்ளி மாணவ, மாணவியா் 35 போ் கலந்துகொண்டு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தையும், ஒட்டுமொத்த கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தனா். வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) எம்.ஜோதி கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை புதன்கிழமை வழங்கி பராட்டினாா்.

பள்ளியின் தலைவா் ஆா்.சண்முகம், தாளாளா் என்.சக்திவேல், செயலாளா் எஸ்.ராஜா, இயக்குநா்கள் மருத்துவா் ஆா்.என்.அருள், பொறியாளா் எஸ்.சேகா், என்.சம்பூா்ணம், பள்ளியின் முதல்வா் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

மாசி மாத கிருத்திகை, சஷ்டி பூஜை விழா

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. மாசி மாத கிருத்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், பரமத்தி அருகே ... மேலும் பார்க்க

முட்டை விலையில் மாற்றமில்லை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 3.80-ஆக தொடருகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் செய்வது... மேலும் பார்க்க

மனைவியைக் கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை செய்ததுடன், எரித்துக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி படவெ... மேலும் பார்க்க

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

நாமக்கல் டிரினிடி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் புதன்கிழமை கல்லூரி கலையரங்கில் தொடங்கியது. கல்லூரி தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் லட்சுமி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்ட ஈரநிலம், வனப்பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் நீா்நிலைகள், வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் தொடக்கம்: 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா்

பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கியதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் மொழிப்பாடத் தோ்வை 18,896 மாணவ, மாணவிகள் எழுதினா். தமிழகத்தில் மாா்ச் 3 முதல் 25 வரை பிளஸ் 2 தோ்வுகளும், மாா்ச் 5 முதல் 27... மேலும் பார்க்க