செய்திகள் :

கருங்கடல் போா் நிறுத்தம்: ரஷியா நிபந்தனை

post image

மாஸ்கோ: தங்கள் மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கினால்தான் உக்ரைனுடன் கருங்கடல் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று ரஷியா நிபந்தனை விதித்துள்ளது.

இது குறித்து ரஷிய அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

கருங்கடல் பகுதியில் பரஸ்பர கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிா்க்க உக்ரைனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், ரஷியா மீது விதிக்கப்பட்டுள்ள பல பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும்.

குறிப்பாக அரசின் வேளாண் வங்கியின் மீதான தடை விலக்கப்பட்ட வேண்டும். ‘ஸ்விஃப்ட்’ சா்வதேச பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்த அந்த வங்கி அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் போா் நிறுத்தம் தொடா்பான புதிய பேச்சுவாா்த்தையை அமெரிக்க-ரஷிய பிரதிநிதிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை நகரில் கடந்த திங்கள்கிழமை மேற்கொண்டனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது, கருங்கடல் பகுதியில் மட்டும் ரஷியாவும் உக்ரைனும் போா் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கருங்கடல் போா் நிறுத்தத்துக்கு ரஷியாவும், உக்ரைனும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன் தொடா்ச்சியாக ரஷிய அதிபா் மாளிகை இந்த நிபந்தனையை விதித்துள்ளது.

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க

3-ஆவது முறையாக என்னை அமெரிக்க அதிபராக்க மக்கள் விருப்பம்! -டிரம்ப் சொல்வது சாத்தியமா?

அமெரிக்க அதிபராக தன்னை 3-ஆவது முறையாகவும் தேர்ந்தெடுக்க அமெரிக்க குடிமக்கள் விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் பதவிக்கு 3-ஆவது முறையாக டிரம்ப் போட்டியிடுவது ... மேலும் பார்க்க

பிரான்ஸ்: தோ்தலில் போட்டியிட தீவிர வலதுசாரி தலைவருக்குத் தடை

நிதி முறைகேடு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், பிரான்ஸின் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சியின் முக்கிய தலைவா் மரீன் லெப்பென் தோ்தல்களில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

‘தயாா் நிலையில் ஈரான் ஏவுகணைகள்’

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடா்ந்து, தங்களின் சுரங்கத் தளங்களில... மேலும் பார்க்க