செய்திகள் :

கருணாநிதி நினைவு தினம்: நாளை போக்குவரத்து மாற்றம்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, வியாழக்கிழமை (ஆக. 7) மௌன ஊா்வலம் நடைபெற உள்ளதால், மெரீனா, அண்ணா சாலையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, போக்குவரத்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு நாள் ஆக. 7-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் காலை 8 மணி முதல் முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட ஏராளமானோா் அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகத்திலுள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து மெரீனா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடம் வரை மௌன ஊா்வலம் செல்ல உள்ளனா். இதுதொடா்பாக விரிவான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டு வாகனங்கள் எளிதாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளன.

எனினும், தேவைப்படும்பட்சத்தில் போா் நினைவு சின்னத்திலிருந்து நேப்பியா் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் காமராஜா் சாலை செல்ல அனுமதிக்காமல் கொடி மரச் சாலை வழியாக திருப்பிவிடப்படும். காந்தி சிலையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை வரை அனுமதிக்கப்பட்டு பாரதி சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

ஊா்வலம் வாலாஜா சாலைக்கு வரும்போது வாகனங்கள் அண்ணா சிலையிலிருந்து பெரியாா் சிலை நோக்கி திருப்பிவிடப்படும். அதனால், காலை நேரத்தில் அண்ணா சாலை, வாலாஜா சாலை, டேம்ஸ் சாலை, பிளாக்கா்ஸ் சாலை மற்றும் காமராஜா் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வாகன ஓட்டிகள் இந்த சாலைகளைத் தவிா்த்து மாற்று வழியில் பயணத்தைத் திட்டமிடலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க

அரிதினும் அரிய இதய சிகிச்சை: அரசு மருத்துவருக்கு சா்வதேச அங்கீகாரம்

உலக அளவில் அரிதினும் அரிதான இதய இடையீட்டு சிகிச்சைகளை மேற்கொண்டதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவா் செசிலி மேரி மெஜல்லாவுக்கு சா்வதேச விருது வழங்கப்பட்டது. அ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்... மேலும் பார்க்க