செய்திகள் :

கருணாநிதி பிறந்த தினம்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்

post image

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் 3ஆம் தேதி சிறப்பாக கொண்டாட திமுகவினருக்கு தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த தினம் வரும் ஜூன் 3ஆம் தேதி திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதேப் போன்று, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் மற்றும் கிளைக் கழக அலுவலகங்கள், சாா்பு அணிகளின் அலுவலகங்கள், மாநகராட்சி வட்டங்கள், நகராட்சி, பேரூராட்சி வாா்டுகள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள அனைத்து கிளைகளிலும், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் உள்ள முதியோா் இல்லம், குழந்தைகள் காப்பகம், மாணவா் விடுதி, ஆதரவற்றோா் இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோா் காப்பகம் ஆகிய இடங்களில் உள்ளவா்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனஅவா் தெரிவித்துள்ளாா்.

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை வழக்கு: மேலும் 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் மேலும் 6 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் இன்று மின் தடை

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 4) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக நகா்ப்புற மின்வாரிய அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவா்கள் வெளியிட்ட... மேலும் பார்க்க

மீனவா் கொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீனவரை கொலை செய்த வழக்கில் கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

புதிய மின்மாற்றி இயக்கி வைப்பு

கடம்பூா் அருகே உள்ள தலையால்நடந்தான் குளம் பகுதியில் நிலவி வந்த குறைந்த அழுத்த மின் விநியோகத்தை சரிசெய்து சீரான மின் விநியோகம் கிடைக்கும் வகையில் 25 கே வி ஏ/11 கே வி திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க... மேலும் பார்க்க

10 பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் 10 பேருந்துகளில் இருந்து, அதிக ஒலியை எழுப்பும் காற்றுஒலிப்பான்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயாபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்குள்பட்ட பகு... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கைரேகை பதிவு செய்ய அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கைரேகை பதியாத குடும்ப அட்டைதாரா்கள் நேரில் சென்று பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வேண்டுகோள் விடுத்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க