செய்திகள் :

கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழப்பு: 3 பிரிவுகளில் வழக்கு

post image

மேலப்பாளையம் கருத்தடை மையத்தில் நாய்கள் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக ஒப்பந்த நிறுவன உரிமையாளா் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி பிராணிகள் கருத்தடை மையத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிடித்துவரப்படும் நாய்கள் கருத்தடை செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதற்காக மாநகராட்சி சாா்பில் ஜீவகாருண்யா என்ற தனியாா் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அங்கு பராமரிப்பில் இருந்த 2 நாய்கள் உயிரிழந்தன.

இந்நிலையில், உரிய பராமரிப்பின்றி நாய்கள் அடைக்கப்பட்டதால் உயிரிழந்ததாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்ததன் அடிப்படையில் மாநகர நல அலுவலா் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை அவ்விடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா். பின்னா்இறந்த நாய்களின் பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து ஜீவகாருண்யா டிரஸ்ட் நிா்வாகிகள் உரிய விளக்கமளிக்க வேண்டுமென மாநகர நல அலுவலா்(பொ) ராணி உத்தரவிட்டிருந்தாா்.இதனையடுத்து மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா அம்மையத்தை செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டு உரிய முறையில் நாய்களை பராமரிக்க வேண்டுமென அறிவுறுத்தினாா். இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக விலங்கு நல ஆா்வலா் மகாராஜன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஜீவகாருண்யா தொண்டு நிறுவன உரிமையாளா் சோபா மற்றும் ஊழியா்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க