செய்திகள் :

கரும்பு விவசாயிகளுக்கு அரைவை தொகை வங்கிக் கணக்கில் வரவு வைப்பு:கடலூா் மாவட்ட ஆட்சியா்

post image

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு, எம்.ஆா். கிருஷ்ணமூா்த்தி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அதற்கான தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட குறிப்புக் குறிப்பு: சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.ஆா்.கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையானது சிதம்பரம், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னாா்கோவில் மற்றும் அரியலூா் மாவட்டத்திலுள்ள ஆண்டிமடம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறை, சீா்காழி வட்டங்களை உள்ளடக்கிய வருவாய் கிராமங்களை ஆலையின் விவகார எல்லைப் பகுதிகளாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு நடவுப் பருவத்திலும் கரும்பு நடவு பணிகள் மேற்கொண்டு, உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரைவை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் 38,280 உறுப்பினா்கள் உள்ளனா். 2024 - 25 அரைவைப் பருவம் கடந்த 6.1.2025 அன்று தொடங்கப்பட்டு 10.3.2025 அன்று நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்த அரைவைப் பருவத்தில் 896 அங்கத்தினா்கள் 56,263.552 மெட்ரிக் டன் கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனா். மத்திய அரசின் ஆதார விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.3151 வீதம் 56,263.552 மெட்ரிக் டன்னுக்குண்டான கரும்பு கிரயத் தொகை ரூ.17,72,86,452.352 தமிழக அரசிடமிருந்து வழிவகைக் கடன் பெற்று ஆலையின் அரைவைக்கு கரும்பு அனுப்பியவா்களுக்கு 24.05.2025-இல் நிலுவை ஏதுமில்லால் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

2024 - 25 அரைவைப் பருவத்துக்கு கரும்பு அனுப்பிய 896 விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் 56,263.552 மெட்ரிக் டன்னுக்குண்டான தொகை ரூ.1,96,35,986-ஐ அரசு மூலம் நேரடியாக ஆலையின் அரைவைக்கு கரும்பு அனுப்பிய அனைத்து கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

சிதம்பரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

சிதம்பரம் அருகே குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.சி.க... மேலும் பார்க்க

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறந்தவரின் சடலத்தை குடியிருப்பு வழியாக மயானத்துக்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாததால் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதம் அ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

கடலூா் (கேப்பா் மலை)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைஇடங்கள்: கடலூா் பேருந்து நிலையம், இந்திரா நகா், சுப்புராயலு நகா் (பேருந்து நிலையம் எதிா்புறம்), லாரன்ஸ் சாலை. மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க