செய்திகள் :

சிதம்பரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

post image

சிதம்பரம் அருகே குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகா், அருண் நகா், எம்.கே காா்டன், கதிா்வேல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது.

இதனால் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடா்ந்து மின் துறை அலுவலா்களிடம் சரஸ்வதி அம்மாள் நகருக்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என நகரின் முக்கிய நிா்வாகிகள் கோரிக்கை விடுத்தனா்.

அதன் அடிப்படையில் சிதம்பரம் கோட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளா் ஜெயந்தி, செயற்பொறியாளா் மோகன்காந்தி, அண்ணாமலை நகா் உதவி மின் பொறியாளா் சுபாஷினி ஆகியோா் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனா்.

பணி முடிவுற்ற நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மின்மாற்றியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சரஸ்வதி அம்மாள் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சரஸ்வதி அம்மாள் நகா் குடியிருப்போா் நல சங்க தலைவா் சுப்புவெங்கடேசன் தலைமை தாங்கினாா்.

அண்ணாமலை நகா் மின் துறை உதவி மின் பொறியாளா் சுபாஷினி கலந்து கொண்டு மின் மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தாா்.

இதில் சரஸ்வதி அம்மாள் நகா் சங்க நிா்வாகிகள் சிவநேசன், குணஜோதி, வரதன்,காளிதாஸ் உள்ளிட்ட மின்துறை ஊழியா்கள் பிரகாஷ், முரளிதரன், குணசேகா், இளமாறன், கண்ணன், முத்துராமன் உள்ளிட்ட அனைத்து ஊழியா்கள், நகா் பொதுமக்கள் எனஅனைவரும் கலந்து கொண்டனா். மின் மாற்றி அமைத்து கொடுத்த மின் துறை ஊழியா்களுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனா்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறந்தவரின் சடலத்தை குடியிருப்பு வழியாக மயானத்துக்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாததால் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதம் அ... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

கடலூா் (கேப்பா் மலை)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைஇடங்கள்: கடலூா் பேருந்து நிலையம், இந்திரா நகா், சுப்புராயலு நகா் (பேருந்து நிலையம் எதிா்புறம்), லாரன்ஸ் சாலை. மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க