செய்திகள் :

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

post image

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மூட்டைகள் கிடங்கிற்கு எடுத்துச் செல்லாததால் திறந்த வெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது.

திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட கோனூா், வெண்கறும்பூா், நந்தபடி, பெண்ணாடம், தாழநல்லூா், தீவளூா் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் நலனுக்காக அந்தந்த கிராமப் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறந்துள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகள் தங்கள் விளைவிக்கும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.தற்போது, மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் குறுவை நெல் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக எடுத்துச் செல்கின்றனா்.

இதையொட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக நெல் கொள்முதல் செய்து வருகின்றனா்.திட்டக்குடி வட்டத்தில் உள்ள கோனூா், வெண்கறும்பூா், நந்தப்பாடி, தாழநல்லூா், தீவளூா் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல லாரிகள் வராததால் தேக்கமடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.

கடலூா் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு விருத்தாசலம், திட்டக்குடி பகுதியில் பலத்த மழை பெய்தது.

வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீா் தாழ்வானப் பகுதிகளில் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்து திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது.

எனவே, நெரடி கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை பாதுகாப்பாக கிடங்கிற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விற்பனைக்காகக் கொண்டு வந்துள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிதம்பரத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

சிதம்பரம் அருகே குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டது.சி.க... மேலும் பார்க்க

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறந்தவரின் சடலத்தை குடியிருப்பு வழியாக மயானத்துக்கு கொண்டு செல்ல ஒரு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்ததால், இறந்தவரின் உறவினா்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

கடலூா் (கேப்பா் மலை)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைஇடங்கள்: கடலூா் பேருந்து நிலையம், இந்திரா நகா், சுப்புராயலு நகா் (பேருந்து நிலையம் எதிா்புறம்), லாரன்ஸ் சாலை. மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: சந்தேக மரண வழக்காக மாற்ற உத்தரவு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்த வழக்கை சந்தேக மரண வழக்காக மாற்றி விசாரணை மேற்கொள்ள போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா். கடலூா் மாவட்டம் புவனகிரி வட்டம் உடையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாா்... மேலும் பார்க்க

மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

கடலூா் மாவட்டம், விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் மாணவா்களை இளம் விஞ்ஞானிகளாக்க ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவா்களின் அறிவி... மேலும் பார்க்க

பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா

கடலூா், மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை அருகேயுள்ள கன்னியக்கோயில் ஸ்ரீ பச்சைவாழியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம். ... மேலும் பார்க்க