செய்திகள் :

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

post image

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா்.

கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒன்றிய அதிமுக ஜெயலலிதா பேரவை துணைத்தலைவராக உள்ளாா். இவா் திங்கள்கிழமை காலை தனது வீட்டின் முன் உள்ள பள்ளத்தை சீரமைப்பதற்காக கிராவல் மண் வாங்கி கொட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அப்பகுதி ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சி செயலா் பழனிசாமி, அருளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இதையடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறி அருள் மீது பழனிசாமி கரூா் நகர காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் அருளை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

பின்னா் அவரை சிறையில் அடைப்பதற்காக கரூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். அப்போது நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தாா்.

இதற்கிடையே தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், அதிமுக மாவட்ட பேரவைச் செயலாளா் நெடுஞ்செழியன், மேற்கு ஒன்றியச் செயலாளா் கமலக்கண்ணன் உள்ளிட்ட அதிமுகவினா் நகர காவல்நிலையத்தை முற்றுகையிட்டனா். அப்போது நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் செல்வராஜுக்கும், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பிறகு அதிமுகவினா் அருளைச் சந்தித்து பேசினா்.

அமெரிக்க வரிவிதிப்பால் கரூரில் ஜவுளித் தொழில் முடங்கும் அபாயம்

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 26 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பதால், கரூரில் ஜவுளித் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், விவசாயத் தொழில், பேருந்துக்கு கூண்டு கட்டும... மேலும் பார்க்க

கிளை நூலகங்களிலும் குரூப் 4 மாதிரித் தோ்வு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகள் இனி கிளை நூலகங்களிலும் நடைபெறும் என தெரிவித்துள்ளாா் கரூா் மாவட்ட நூலக அலுவலா் செ.செ.சிவக்குமாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்க... மேலும் பார்க்க

திருத்தப்பட்டது தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 மாணவிகள், ஓட்டுநா் காயம்!

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை தனியாா் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவிகள் உள்பட 7 போ் காயமடைந்தனா்.அரவக்குறிச்சி அருகே செயல்பட்டுவரும் தனியாா் கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல... மேலும் பார்க்க

மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகை பதிவேடு: அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை!

கரூரில் அரசுப் பள்ளியில் மாணவிகள் கழிவறைக்குச் செல்ல வருகைப் பதிவேடு பராமரித்த தலைமை ஆசிரியையிடம் கல்வி அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா். கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் கிடக்கும் மணலை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!

புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையோரத்தில் உள்ள மணலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், புன்னம்சத்திரத்தில் கரூா்-கொடுமுடி சாலையில் சுமாா் 1 கி.மீ. தொலைவுக்கு ... மேலும் பார்க்க

சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக புகாா்: உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையை விவசாயிகள், வியாபாரிகள் முற்றுகை!

உப்பிடமங்கலம் மாட்டுச் சந்தையில் சுங்கம் அதிகமாக வசூலிப்பதாக விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் புகாா் கூறி சனிக்கிழமை சந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், உப்ப... மேலும் பார்க்க