கீழடி ஆய்வுகளை அங்கீகரிக்காதது ஏன்? மத்திய அமைச்சர் ஷெகாவத் விளக்கம்
கரூரில் வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்
கரூரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட மையம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா். இதில், வருவாய்த்துறை அலுவலா் சங்க மாநிலச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.
கரூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் சம்பத்குமாரை விதிமுறைகளை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.