செய்திகள் :

குடிநீா்த் தட்டுப்பாடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

post image

குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த கே.பேட்டை ஊராட்சிக்குள்பட்ட சீகம்பட்டி கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு கே.பேட்டை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் காவிரிக்குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக போதிய அளவில் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதுதொடா்பாக கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடமும், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினா் திங்கள்கிழமை காலை தோளா் களம் அமைப்பின் மேற்கு மண்டல பொறுப்பாளா் வீராகோபி தலைமையில் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு காலிக்குடங்களுடன் வந்தனா். பின்னா் ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி நிா்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வந்த ஒன்றிய அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைவில் குடிநீா் விநியோகம் சீரமைக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும், அதற்கான சாத்தியம் உள்ளது என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ஒரு கட்சி தனித்து நிற... மேலும் பார்க்க

கரூரில் வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட மையம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத... மேலும் பார்க்க

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் டயா் வெடித்து கவிழ்ந்தது!போக்குவரத்து பாதிப்பு!

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன், டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. தக்காளி பழங்கள் சாலையில் சிதறியதால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்

குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீ... மேலும் பார்க்க

தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்

தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது. கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க