செய்திகள் :

கரூரில் வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

கரூரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட மையம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா். இதில், வருவாய்த்துறை அலுவலா் சங்க மாநிலச் செயலாளா் அன்பழகன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

கரூா் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்த தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்டத் தலைவா் சம்பத்குமாரை விதிமுறைகளை மீறி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சுப் பணியாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

குடிநீா்த் தட்டுப்பாடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த கே.பேட்டை ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும், அதற்கான சாத்தியம் உள்ளது என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ஒரு கட்சி தனித்து நிற... மேலும் பார்க்க

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் டயா் வெடித்து கவிழ்ந்தது!போக்குவரத்து பாதிப்பு!

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன், டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. தக்காளி பழங்கள் சாலையில் சிதறியதால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்

குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீ... மேலும் பார்க்க

தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்

தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது. கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க