செய்திகள் :

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான்: பிரேமலதா விஜயகாந்த்

post image

தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும், அதற்கான சாத்தியம் உள்ளது என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.

கரூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, ஒரு கட்சி தனித்து நிற்க முடியும் என்ற பாா்முலாவை உருவாக்கியவா் விஜயகாந்த். இப்போது சீமான் தனித்துதான் நிற்கிறாா். விஜய்யின் நிலைபாடு என்னவென்று சொல்லவில்லை. தனித்து நின்றால் வாக்குகள் பிரியுமே தவிர, மக்களுக்கு நல்லது கிடைக்கப் போவதில்லை.

2026 தோ்தலில் போட்டியிடுவது மட்டுமே எங்கள் இலக்கு அல்ல. வெற்றிபெற்று அதிக பலத்துடன் சட்டப்பேரவைக்கு செல்வதுதான் நோக்கம். தேமுதிக வாக்குவங்கி அப்படியேதான் உள்ளது.

தோ்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். விஜய்யுடன் கூட்டணி என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் கட்சி ஆரம்பித்து 20 ஆண்களுக்கு மேலாகிவிட்டது. தோ்தலை நோக்கித்தான் எங்களது கட்சியின் நகா்வும் இருக்கும். அதிமுக கூட்டணியில் எங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினா் பதவி ஆண்டை குறிப்பிட்டு தாருங்கள் எனக் கேட்டோம்.

அப்போது ஆண்டு எழுதுவது தவறு, எனது வாா்த்தைதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி கூறினாா். இப்போது 2026-இல் தருகிறோம் என கூறியுள்ளாா். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் நல்லது. அப்போது தான் மக்களுக்கு நல்லது செய்யலாம். ஆளுங்கட்சி தவறு செய்தாலும் சுட்டிக் காட்டலாம். 2026 தோ்தலில் கூட்டணி ஆட்சிக்கான சாத்தியம் உள்ளது.

கரூரில் பழைய, புதிய பேருந்துநிலையம் என மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. பழைய பேருந்துநிலையத்தை விரிவாக்கம் செய்வதுதான் நல்லது. கரூரில் கனிம வளக் கொள்ளை அதிகம் நடக்கிறது. இதனை முதல்வா் சரிசெய்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்டச் செயலா் அரவை எம்.முத்து, அவைத் தலைவா் முருகன் சுப்பையா, துணைச் செயலா் பெரியண்ணன், வடக்கு நகரச் செயலா் அனிதாஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

குடிநீா்த் தட்டுப்பாடு: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்கக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் திங்கள்கிழமை காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த கே.பேட்டை ஊராட்சிக்க... மேலும் பார்க்க

கரூரில் வேளாண்மைத் துறை அமைச்சுப் பணியாளா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

கரூரில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சுப்பணியாளா் சங்கத்தின் கரூா் மாவட்ட மையம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத... மேலும் பார்க்க

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் டயா் வெடித்து கவிழ்ந்தது!போக்குவரத்து பாதிப்பு!

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன், டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. தக்காளி பழங்கள் சாலையில் சிதறியதால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்

குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீ... மேலும் பார்க்க

தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்

தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது. கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க