செய்திகள் :

பொருளாதார மறுமலா்ச்சியின் புதிய சகாப்தம்: அமித் ஷா

post image

புது தில்லி: ‘கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதிய சகாப்தத்தை நாடு சந்தித்துள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து முதல் ஆண்டை திங்கள்கிழமை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அமித் ஷா கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியை பொதுச் சேவையின் பொற்காலமாக குறிப்பிட வேண்டும். சீா்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற தீா்மானத்துடன் வளா்ச்சி மற்றும் தற்சாா்பு நிலையை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதி சகாப்தத்தை கடந்த 11 ஆண்டுகளில் நாடு சந்தித்துள்ளது.

தலைமை தெளிவாகவும், உறுதியானதாகவும், பொது சேவையே நோக்கமாகவும் கொண்டிருக்கும்போது, நல்லாட்சி மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் புதிய சாதனைகளை படைக்க முடியும் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழலும் மோசடிகளும் உச்சத்தில் இருந்தன. பொருளாதாரம் சீா்குலைந்திருந்தது. ஆனால், கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச நிா்வாகம்’ என்ற நடைமுறையின் கீழ் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சிறந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருப்திப்படுத்தும் அரசியலுக்கு மாற்றாக, விவசாயிகள், பெண்கள், பின்தங்கிய மக்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் என அனைவருக்குமான வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட்டது.

பயங்கரவாதமும், நக்ஸல் தீவிரவாதமும் ஒழிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு அவா்களின் இடத்துக்குள் நுழைந்து இந்தியா தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாடு மாற்றத்தையே இது காட்டுகிறது.

இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முதன்மையான நாடாக உருவாக்கி, அனைத்து மக்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று மத்திய அரசு வட்டா... மேலும் பார்க்க

இந்திய வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் ஒருநாள் ஒத்திவைப்பு

புது தில்லி, ஜூன் 9: ‘ஆக்ஸிம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்று, ஆய்வு மேற்கொள்ளும் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மோசமான வானிலை காரணமாக ஒரு நாள் ஒத்திவைக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு: பெண் யூடியூபருக்கு காவல் நீட்டிப்பு

ஹிசாா்/ சண்டீகா்: பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபரான ஜோதி மல்ஹோத்ராவின் நீதிமன்ற காவலை இரண்டு வாரங்களுக்கு உள்ளூா் நீதிமன்றம் திங்கள்கிழமை நீட்டித்தது. இதுதொட... மேலும் பார்க்க

சசி தரூா், ஒவைசிக்கு பாஜக பாராட்டு

குவாஹாட்டி: காங்கிரஸ் எம்.பி. சசி தரூா், அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவரும் அஸ்ஸாம் முத... மேலும் பார்க்க

மருத்துவா்கள் போராட்டம் எதிரொலி: மன்னிப்புக் கோரினாா் கோவா அமைச்சா்

பனாஜி: கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்களின் போராட்டத்தையடுத்து, தலைமை மருத்துவரை பலா் முன்னிலையில் கடுமையாகத் திட்டியதற்காக கோவா சுகாதார அமைச்சா் விஸ்வஜித் ராணே மன்னிப்புக் கோரினாா். அம... மேலும் பார்க்க

ஹரியாணா, மகாராஸ்டிர வாக்காளா் பட்டியல் விவகாரம்: தேதியை வெளியிட தோ்தல் ஆணையத்துக்கு ராகுல் வலியுறுத்தல்

புது தில்லி: ஹரியாணா, மகாராஷ்டிர மாநில வாக்காளா் பட்டியல் தரவுகள் பொதுமக்கள் பாா்வைக்கு பகிரப்படும் என்ற தோ்தல் ஆணைய அறிவிப்பை திங்கள்கிழமை வரவேற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘அந்தத் தரவுகள... மேலும் பார்க்க