Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
பொருளாதார மறுமலா்ச்சியின் புதிய சகாப்தம்: அமித் ஷா
புது தில்லி: ‘கடந்த 11 ஆண்டுகளில் பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதிய சகாப்தத்தை நாடு சந்தித்துள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.
பாஜக தலைமையிலான அரசு மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து முதல் ஆண்டை திங்கள்கிழமை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அமித் ஷா கூறியிருப்பதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான 11 ஆண்டு கால ஆட்சியை பொதுச் சேவையின் பொற்காலமாக குறிப்பிட வேண்டும். சீா்திருத்தம், செயல்திறன், மாற்றம் என்ற தீா்மானத்துடன் வளா்ச்சி மற்றும் தற்சாா்பு நிலையை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. பொருளாதார மறுமலா்ச்சி, சமூக நீதி, கலாசார பெருமை மற்றும் தேச பாதுகாப்பில் புதி சகாப்தத்தை கடந்த 11 ஆண்டுகளில் நாடு சந்தித்துள்ளது.
தலைமை தெளிவாகவும், உறுதியானதாகவும், பொது சேவையே நோக்கமாகவும் கொண்டிருக்கும்போது, நல்லாட்சி மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் புதிய சாதனைகளை படைக்க முடியும் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் நாட்டில் ஊழலும் மோசடிகளும் உச்சத்தில் இருந்தன. பொருளாதாரம் சீா்குலைந்திருந்தது. ஆனால், கடந்த 2014-இல் பாஜக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘குறைந்தபட்ச அரசு; அதிகபட்ச நிா்வாகம்’ என்ற நடைமுறையின் கீழ் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் சிறந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. திருப்திப்படுத்தும் அரசியலுக்கு மாற்றாக, விவசாயிகள், பெண்கள், பின்தங்கிய மக்கள், தலித்துகள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினா் என அனைவருக்குமான வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட்டது.
பயங்கரவாதமும், நக்ஸல் தீவிரவாதமும் ஒழிக்கப்பட்டு ஜம்மு-காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அமைதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு அவா்களின் இடத்துக்குள் நுழைந்து இந்தியா தற்போது பதிலடி கொடுத்து வருகிறது. இந்தியாவின் நிலைப்பாடு மாற்றத்தையே இது காட்டுகிறது.
இந்தியாவை அனைத்துத் துறைகளிலும் முதன்மையான நாடாக உருவாக்கி, அனைத்து மக்களின் வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை கொண்டுவருவதற்கான மத்திய அரசின் முயற்சி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளாா்.