செய்திகள் :

கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெருந்தகை வேதனை!

post image

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் இன்று காலை கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

செல்வப் பெருந்தகை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்வப்பெருந்தகை , " வாக்கு திருட்டைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.‌ இதன் ஒரு பகுதியாக தற்போது கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. 6 கோடி கையெழுத்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியாத ஹேமமாலினி, அனுராக் தாக்கூர் ஆகியோர் தி.மு.க மீது குற்றம் சாட்டுகின்றனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி அரசியல் செயவதற்காக அமைக்கப்பட்டுள்ள கமிட்டி. அவர்கள் வந்தவுடன் அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உண்மை கண்டறியும் குழு ஏன் கும்பமேளாவில் நடந்த விபத்தின் போது அமைக்கப்படவில்லை. மேலும், மணிப்பூர் மாநிலத்தில் எத்தனை படுகொலைகள் மற்றும் வன்கொடுமைகள் நடத்தப்பட்டன.

செல்வப் பெருந்தகை

அங்கு இந்த உண்மை கண்டறியும் குழு அமைத்து அனுப்பியிருக்க வேண்டுமல்லவா. கரூர் துயர சம்பவத்தின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. ஆனால் , சில அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் பிணங்களின் மீது அரசியல் செய்து வருவது வேதனை அளிக்கிறது. இது போன்று பிணத்தை வைத்து சில கட்சி தலைவர்கள் அரசியல் செய்வது அரசியல் பிழை. இரவோடு இரவாக ஆணையம் அமைத்து, விமானத்தை பிடித்து கரூர் வந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்தும், உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலியும் செலுத்திவிட்டு சென்றுள்ளார்" என்றார்.

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக... மேலும் பார்க்க

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்' மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்... மேலும் பார்க்க

'விஜய் மீது ஏன் வழக்கு போடவில்லை? தமிழ்நாடு அரசு அச்சப்படுகிறதா?' - திருமாவளவன் கேள்வி

கடந்த சனிக்கிழமை, கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஹேமமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட எம்.பி குழு ஒ... மேலும் பார்க்க

`பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்; திட்டறவங்களைப் பத்தி எதுவும் சொல்றதுக்கில்ல!' - பிக்பாஸ் அசீம்

கரூர் விவகாரம் குறித்து நடிகரும் பிக்பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னருமான அசீம் தன்னுடைய ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில்‘’வயதானவங்களும், கர்ப்பிணிப் பெண்களும் குழந்தைகளும் வந்... மேலும் பார்க்க

'ஜி.கே மணியின் மகனுக்கு பாமக இளைஞர் சங்கத் தலைவர் பதவி!' - ராமதாஸ் அறிவிப்பு

பாமக தற்போது இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. ஒன்று பாமக நிறுவனர் ராமதாஸ் அணி. மற்றொன்று பாமக தலைவர் அன்புமணி அணி. சமீபத்தில் அன்புமணியை பாமக கட்சியில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அறிவித்திருந்தார்.... மேலும் பார்க்க

RSS 100 கொண்டாட்டம்: அமெரிக்காவின் 50% வரி, நேபாள வன்முறை, ஆபரேஷன் சிந்தூர் - மோகன் பகவத் கருத்து

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் 100-வது ஆண்டு கொண்டாட்டம் நடந்தது.அமெரிக்காவின் 50 சதவிகித வரி அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியா மீது அமெரிக்கா விதித... மேலும் பார்க்க