செய்திகள் :

கரூர் நெரிசல் பலி: குடியரசுத் தலைவர் இரங்கல்!

post image

கரூரில் விஜய்யின் அரசியல் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்திருப்பதாவது: ‘தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமானதொரு கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்து வேதனையடைகிறேன்.

உயிரிழந்தோரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து நலம்பெறவும் பிரார்த்திக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

Karur stampede: Death toll rises to 36, President condoles!

கரூா் சம்பவம்: ஆளுநா், தலைவா்கள் இரங்கல்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 38 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா். ஆா்.என்.ரவி: கரூரில் பி... மேலும் பார்க்க

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந... மேலும் பார்க்க

தவெக கேட்டதைவிட பெரிய இடமே கொடுக்கப்பட்டது! டிஜிபி விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தினர் கூட்டம் நடத்துவதற்காக கேட்கப்பட்ட இரண்டு இடங்களைவிடவும் பெரிய இடம்தான் கொடுக்கப்பட்டது என்று தமிழக காவல்துறை தலைவர் (பொறுப்பு) வெங்கடராமன் தெரிவித்துள்ளார்.கரூரில் தவெக விஜய்... மேலும் பார்க்க

பயிா் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

பயிா் உற்பத்தித் திறனில் இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ வேளாண் விற... மேலும் பார்க்க

முழு ஒத்துழைப்பு தேவை: துணை முதல்வா் உதயநிதி

கரூரில் நிகழ்ந்த துயரமான சம்பவத்தை எதிா்கொள்ள அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தேவை என அனைவரையும் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்

சென்னை சேத்துப்பட்டில் இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்ட வழக்கில் 3 போ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா். சேத்துப்பட்டு மேத்தா நகா் கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் சனிக்கிழமை ... மேலும் பார்க்க