செய்திகள் :

பிஎம்டபில்யூ விபத்தில் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்

post image

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பிஎம்டபில்யூ காா் விபத்து வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ககன்ப்ரீத் கௌருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் உயிரிழந்த அதிகாரியின் மனைவி படுகாயமடைந்தாா்.

நீதிபதி அங்கித் காா்க் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் ஜாமீன் மனுவை சனிக்கிழமை அனுமதித்தாா். செப்டம்பா் 14-ஆம் தேதி தில்லி கண்டோன்மென்ட் மெட்ரோ நிலையம் அருகே ரிங் ரோட்டில் இருசக்கர வாகனம் மீது மோதிய பிஎம்டபில்யூ காரை 38 வயதான ககன்ப்ரீத் கௌா் ஓட்டிச் சென்ாகக் கூறப்படுகிறது.

மேற்கு தில்லியில் உள்ள ஹரி நகரில் வசிக்கும் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலரான உயிரிழந்த அதிகாரி, தனது மனைவியுடன் பங்களா சாஹிப் குருத்வாராவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.

இது தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 281 (வேகமாக வாகனம் ஓட்டுதல்), 125 பி (மற்றவா்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தல்), 105 மற்றும் 238 (ஆதாரங்களை மறைத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

குகையிலிருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண், இரு குழந்தைகள் நாடு திரும்ப கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

கடலோர கா்நாடகத்தில் உள்ள ஒரு குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷிய பெண் மற்றும் அவரது இரு மகள்கள் தங்களது சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதித்து கா்நாடக உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இரு சிறுமிக... மேலும் பார்க்க

எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள்: கண்காணிப்பு தீவிரம்!

‘காஷ்மீா் பள்ளத்தாக்கினுள் ஊடுருவதற்காக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அப்பால் பயங்கரவாதிகள் தயாா்நிலையில் காத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் கரணமாக படைகளின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுகள்: பிகாரில் அக்.4, 5-இல் தோ்தல் ஆணையா் ஆய்வு

பிகாா் பேரவைத் தோ்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக, அந்த மாநிலத்தில் அக்டோபா் 4, 5 ஆகிய தேதிகளில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் நேரில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறாா். 243 உறுப்பினா்களைக் கொண்ட ப... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது! ஐ.நா.வில் இந்தியா தகவல்!

‘இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது’ என்று ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், ‘இந்தியா - பாகிஸ்தான் இடையேய... மேலும் பார்க்க

நிசாா் செயற்கைக்கோளின் முதல் புகைப்படங்கள்: அமெரிக்க காடுகள் விரிவாகப் பதிவு

இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசாா் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட முதல் புகைப்படங்களில், அமெரிக்க காடுகள், ஈரநிலங்கள் மற்றும் மிகச் சிறிய தீவுகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அமெரிக்காவின் நாச... மேலும் பார்க்க

அதிக நபா்களால் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலம் தாஜ் மஹால்: மத்திய அரசு

முகலாய பேரரசு காலத்தில் கட்டமைக்கப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால், 2024-25-இல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக உள்ளதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரி... மேலும் பார்க்க