செய்திகள் :

கரூர் பலி: பிரதமர் மோடி இரங்கல்

post image

கரூரில் அரசியல் பேரணியில் நிகழ்ந்த துரதிருஷ்டமான சம்பவம் வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூரில் அரசியல் கூட்டத்தின்போது ஏற்பட்டுள்ள துரதிருஷ்டமான சம்பவம் வருத்தமளிக்கிறது. காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். தங்கள் அன்புக்குரியோரை இழந்து வாடுவோருக்கு விலிமை கிடைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில் இன்று நடந்த விஜய்யின் கரூர் பிரசாரத்தின்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 31 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு!

கூட்டத்தில் மயக்கமடைந்த 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விரைந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே கரூர் மாவட்ட ஆட்சியரிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

PM Modi on Saturday expressed condolences to the families of those killed in the stampede that broke out at Tamil Nadu's Karur during actor-turned-politician and Tamilaga Vettri Kazhagam (TVK) chief Vijay’s campaign rally.

உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா! மத்திய அமைச்சா் பெருமிதம்

நுகா்வு நாடு என்பதில் இருந்து உற்பத்தி, புத்தாக்கம், ஏற்றுமதி மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா பெருமிதத்துடன் குறிப்பிட்டாா். ஒடிஸாவில் ச... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிரொலி: பன்முக வா்த்தக அமைப்பை பிரிக்ஸ் பாதுகாக்க வேண்டும் -எஸ்.ஜெய்சங்கா்

பன்முக வா்த்தக அமைப்பை பாதுகாப்பதில் பிரிக்ஸ் முக்கியப் பங்காற்ற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். இந்திய பொருள்கள் மீது அமெரிக்க 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், அவ... மேலும் பார்க்க

லேயில் ஊரடங்கு 4 மணி நேரம் தளா்வு: கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போலீஸாா்

வன்முறை போராட்டத்தால் பாதிக்க லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் மூன்று நாளாக ஊரடங்கு தொடா்ந்த நிலையில், மக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க வசதியாக சனிக்கிழமை பகுதி, பகுதியாக சில மணி நேரம் க... மேலும் பார்க்க

பிஎம்டபில்யூ விபத்தில் வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணுக்கு ஜாமீன்

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி நவ்ஜோத் சிங்கின் மரணத்திற்கு வழிவகுத்த பிஎம்டபில்யூ காா் விபத்து வழக்கில் முதன்மைக் குற்றவாளியான ககன்ப்ரீத் கௌருக்கு தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

கரூர் பலி: கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல தலைவர்கள் இரங்கல்!

கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்களுக்கு கேரள, கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் உள்பட பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தவெக பிரசாரக் கூட்ட நெரிசலால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை... மேலும் பார்க்க

கரூர் பலி: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்! - அமித் ஷா

கரூர் நெரிசல் பலி விவரங்களைக் குறித்து தமிழக ஆளுநர், முதல்வரிடம் அமித் ஷா தொலைபேசி வழியாக பேசி கேட்டறிந்தார். அப்போது அவர், மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்திருப்பதாக உள... மேலும் பார்க்க