செய்திகள் :

கரூர் மரணங்கள்: "அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள்; அரசுதான் பொறுப்பு" - திமுக-வை சாடும் இபிஎஸ்

post image

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை, அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான தனிநபர் ஆணையத்தின் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதற்கிடையில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பலவாறு பேசிவருகின்றன.

கரூர் துயரம்
கரூர் துயரம்

இந்த நிலையில், அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தருமபுரியில் தனது அரசியல் சுற்றுப்பயண பொதுக்கூட்டத்தில் மக்களிடம் கரூர் சம்பவம் குறித்து பேசினார்.

கரூரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்திவிட்டு உரையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, "ஆட்சியாளர்கள் உரிய பாதுகாப்பு வழங்கியிருந்தால் கரூரில் இன்று 41 உயிர்கள் காக்கப்பட்டிருக்கும்.

இந்த அரசாங்கம்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆட்சியாளர்களைப் பார்த்துதான் கேட்கமுடியும்.

163 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுக்கூட்டத்தில் மக்களை நான் சந்தித்தேன். 5, 6 மாவட்டங்களில்தான் காவல்துறை பாதுகாப்பு கொடுத்தார்கள்.

மற்ற மாவட்டங்களில் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாதுகாப்போடுதான் கூட்டம் நடைபெற்றது.

ஆளுங்கட்சி கூட்டம் நடத்தினால், ஆளில்லாத சாலைகளில்கூட பாதுகாப்பு கொடுக்கிறார்கள்.

கரூர் சம்பவம் பற்றி எப்படி ஒரு துறை செயலாளர் சொல்ல முடியும். தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, துறை செயலாளரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எடப்பாடி பழனிசாமி

அங்கே இருக்கின்ற முன்னாள் அமைச்சர் முகத்தில் பயம் தெரிகிறது. அதிகாரிகளும், முன்னாள் அமைச்சரும் எதற்காக மாறி மாறி பொய் சொல்கிறீர்கள்.

இனியாவது அரசியல் கட்சிகள் நடத்துகின்ற கூட்டங்களுக்கு, எந்தக் கட்சி என்று பிரித்துப் பார்க்காமல் முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

அ.தி.மு.க ஆட்சியில் அனைத்துப் போராட்டங்களுக்கும் அனுமதி கொடுத்தோம். ஆனால், இந்த ஆட்சியில் ஜனநாயகத்தைப் பார்க்க முடியவில்லை.

கரூரில் எங்கள் எழுச்சிப் பயணம் கூட்டத்துக்கு ரவுண்டானா பகுதியைத்தான் கேட்டோம்.

ஆனால், சம்பவம் நடந்த இடத்தைத்தான் கொடுத்தார்கள். வேறு வழியில்லாமல் அங்கு நடத்தினோம்.

நான் முதலமைச்சராக இருந்தபோது, ரவுண்டானா பகுதியில் தி.மு.க பொதுக்கூட்டம் நடத்த 2 முறை அனுமதி கொடுத்தோம்.

தருமபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு அங்கு 3 முறை தி.மு.க பொதுக்கூட்டம் நடத்தியிருக்கிறது. உங்களுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்கிறார்கள்.

மற்ற எதிர்க்கட்சிகளுக்கு ஏன் அனுமதி கொடுப்பதில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் இந்த ஆட்டம் போடுகிறீர்கள்.

இதற்கெல்லாம் மக்கள் முடிவு கட்டுகின்ற நேரம் வந்துவிட்டது என்பதை ஸ்டாலின் உணர வேண்டும்" என்று கூறினார்.

RSSக்கு புகழாரம் - ஆளும் தி.மு.க அரசு மீது கடும் விமர்சனம்; ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டாக்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கும் இடையேயான அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார். அதில், "1925-ல் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்... மேலும் பார்க்க

விஜய் பேச்சு எப்படி இருந்தது? - சீமான் விளக்கம்

விருதுநகரில் உள்ள காமராஜர் இல்லத்திற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போ... மேலும் பார்க்க

Ooty: பராமரிப்பு இல்லை, ஆக்கிரமிப்பு - எங்க சார் நடக்குறது? | Photo Album

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு தாவரவியல் பூங்கா நடைபாதைஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஆவின் ஜங்ஷன் நடைபாதைஆக்கி... மேலும் பார்க்க

இலங்கை: செம்மணி மனித புதைகுழிகள்; மனித உரிமை மீறலுக்கு நீதி வேண்டி நடைபெற்ற தீப்பந்தப் போராட்டம்!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு எதிராக குறிப்பாக செம்மணி பகுதியில் அதிகளவிலான குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட மனித புதைகுழிகளுக... மேலும் பார்க்க

முடங்கிய அமெரிக்க அரசாங்கம்: 'கூல்' மோடில் ட்ரம்ப்; இந்தியாவிற்கு ஒரு பாசிட்டிவ் சிக்னல்- முழு அலசல்

அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்ட அரசாங்க நிதி ஒதுக்கீடு மசோதா தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால், அமெரிக்காவின் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் வேலையிழப்புகள், பல்வேறு அரசு நிர்வாகங்கள் முடக்... மேலும் பார்க்க

கரூர் துயரம்: "பிணங்களின் மீது சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்" - செல்வப்பெருந்தகை வேதனை!

நாடாளுமன்ற தேர்தல் வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க