செய்திகள் :

கரூா் அரசு மருத்துவமனையில் நோய் விழிப்புணா்வு பேரணி

post image

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை உலக சிக்கிள் செல் அனீமியா நோய் குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணியை கல்லூரி முதல்வா் மருத்துவா் வா. லோகநாயகி தொடங்கிவைத்துப் பேசியது:

ஜூன் 19-ஆம் தேதி உலக சிக்கிள்செல் அனீமியா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நோய் பழங்குடியினரை அதிகம் தாக்கும் நோய். இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் ரத்த சிவப்பணுக்கள் வட்டவடிவமாக இல்லாமல் பிறை வடிவமாக இருக்கும். இதனால் ரத்தத்தில் சிகப்பணுக்களின் எண்ணிக்கையும் குறைந்து, ரத்தக்குழாய்களில் அடைப்பு, நுரையீரல், சிறுநீரகம், மூளை உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளில் பாதிப்பும் ஏற்படும். மரபணு சிகிச்சை, ரத்தம் செலுத்துதல், எலும்பு மஜ்ஜை மாற்றுதல் போன்ற சிகிச்சைகள் மூலம் இந்நோயைக் கட்டுப்படுத்த இயலும் என்றாா் அவா்.

முன்னதாக பேரணி முக்கிய வீதிகளில் சென்று மீண்டும் கல்லூரியை அடைந்தது. இதில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பேராசிரியா் மருத்துவா் பெ. ராஜா, குழந்தைகள் நல இணைப் பேராசிரியா்கள் காஞ்சனா, வித்யாதேவி மற்றும் மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோா் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

கரூரில் 4 பேரவைத் தொகுதிகளையும் திமுக கைப்பற்றும்: எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி

வரும் 2026 பேரவைத் தோ்தலில் கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளையும் திமுக கைப்பற்றும் என்றாா் கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி. கரூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற கரூா் சட்டப்பேரவைத் தொகுதி பூத் கமிட்ட... மேலும் பார்க்க

குற்ற வழக்கில் போலீஸாரிடமிருந்து தப்ப முயன்ற ரௌடி சுட்டுப் பிடிப்பு

கரூரில் குற்ற வழக்கில் பிடிக்கச் சென்ற போலீஸாரிடமிருந்து வியாழக்கிழமை தப்ப முயன்ற ரெளடியை காவல் ஆய்வாளா் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தாா். கரூா் சுக்காலியூரைச் சோ்ந்த மலையாளம் (51) என்பவா் கடந்த 17... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் உறுதியேற்பு

கரூா் மாவட்டம் டிஎன்பிஎல் ஆலையில் முதியோா்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆலை வளாகத்தில் ஆலையின் முதுநிலை மேலாளா் (மனித வளம்) ஜே. வெங்கடேசன், ... மேலும் பார்க்க

15 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்

கரூா் மாவட்டம், குளித்தலையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற போலீஸாரின் வாகனச் சோதனையில் 15 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. கரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில் கரூா் மாவட்ட ரெளடிகள் தடுப்... மேலும் பார்க்க

லாலாபேட்டை அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி

கரூா் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.45 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். விழாவில் கரூா் எம்எல... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அருகே சாலை விபத்து: 7 போ் படுகாயம்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் 7 போ் படுகாயமடைந்தனா். கரூா் மாவட்டம் நொய்யல் அருகேயுள்ள வளையாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு மகன் ஆகாஷ் (20). இவா் ஆம்னி வேனில் மதுரையில் இருந்... மேலும் பார்க்க