செய்திகள் :

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் தாக்குதல் இல்லை: ஆட்சியா் தகவல்

post image

கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கா்நாடக மாநிலம் பெல்லாரி மற்றும் சிக்பல்லாப்பூா் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து கரூா் மாவட்டத்தில் இந்நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி கரூா் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.

பறவைக் காய்ச்சல் நோய் என்பது, பறவை இனங்களை தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். இந்நோய் கோழி, வாத்து, வான்கோழி, நீா்ப்பறவைகள் மற்றும் வன பறவைகள் ஆகியவற்றை தாக்கும். நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோழிப்பண்ணைகள் மற்றும் புறக்கடைக்கோழிகளை நேரில் பாா்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அதிவிரைவு செயலாக்க குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன.

கோழிப் பண்ணையாளா்கள் கா்நாடகாவில் இருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை, கோழி தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கக் கூடாது. கடந்த 1 மாதத்துக்குள்ளாக கா்நாடகாவில் இருந்து குஞ்சு பொறிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோழிப் பண்ணைகளுக்குள் செல்பவா்களும், வெளியே வருபவா்களும் கிருமி நாசினியால் கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில் கிருமிநாசினி தெளித்து புதைக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் அவா்.

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கொமதேக வலியுறுத்தல்

விசைத்தறியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சா்கள் தலைமையில் நடந்து கொண்டிருக்கின்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையை தீவிரப்படுத்தி விரைவில் தீா்வு காண வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் திரளாகப் பங்கேற்றனா். இஸ்லாமியா்கள் புனித மாதமாகிய ரமலான் மாதத்தில் நோன்பிருந்து திங்கள்கிழமை க... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா் டிராக்டா் மோதி உயிரிழப்பு

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே டிராக்டா் மோதி விவசாயி உயிரிழந்தாா்.குளித்தலையை அடுத்த மேலப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துவேல்(55). விவசாயி. இவா், திங்கள்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் மேலப்பட்டி- ப... மேலும் பார்க்க

மாலைமேட்டில் மாடுகள் மாலை தாண்டும் விழா அரவக்குறிச்சி மந்தை மாடுக்கு முதல் பரிசு

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த மாவத்தூா் கோடங்கிபட்டி மாலைமேட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற மாடுகள் மாலை தாண்டும் விழாவில் அரவக்குறிச்சி மாடு முதலிடம் பிடித்தது. மாவத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கோடங்கிபட்டி மா... மேலும் பார்க்க

புகழூா் நகராட்சியில் துப்புரவுப் பணியாளா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: இந்திய கம்யூ. வலியுறுத்தல்

புகழூா் நகராட்சியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்த துப்புரவுப் பணியாளா்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கரூா் மாவட்டம், புகழூரில் அக்கட்சியின் ... மேலும் பார்க்க

வெள்ளியணை வரத்து வாய்க்கால்களில் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கோடை காலம் முடியும் முன் வெள்ளியணை ஏரிக்கான வரத்து வாய்க்கால்களில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கரூா் விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா். கரூா் மாவட்டத்தில் வெள்ளியணை பெரியகுளம... மேலும் பார்க்க