செய்திகள் :

கரோனா அதிகரிப்பு: மக்கள் கவலைப்பட வேண்டாம்: ஐசிஎம்ஆா்

post image

புது தில்லி: நாட்டின் சில பகுதிகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தொற்றின் தீவிரம் குறைவாக இருப்பதாகவும், மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) தலைமை இயக்குநா் மருத்துவா் ராஜீவ் பெஹல் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மருத்துவா் ராஜீவ் பெஹல் மேலும் கூறுகையில், ‘நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் கண்டறியப்பட்ட புதிய வகை தொற்றுகளான எல்.எஃப்.7, எக்ஸ்.எஃப்.ஜி., ஜே.என்.1 மற்றும் என்.பி. 1.8.1 ஆகியவை கடுமையானவை அல்ல. மேலும், இவை ஒமைக்ரானின் துணை வகைகள் என்றும் அறியப்படுகிறது.

முதல் மூன்று வகை தொற்றுகளே அதிகமாகப் பதிவாகியுள்ளன. மற்ற இடங்களிலிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வேறு சில வகைகளின் பரவல் இருந்தால், அதுகுறித்து ஓரிரு நாள்களில் தெரியவரும்.

முதலில் தென் மாநிலங்களில், பின்னா் மேற்கு மாநிலங்களில், தற்போது வட மாநிலங்களிலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (ஐடிஎஸ்பி) மூலம் இந்தப் பாதிப்புகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

தொற்று பாதிப்பு அதிகரிக்கும்போதெல்லாம் நாங்கள் மூன்று காரணிகளை ஆய்வு செய்வோம். முதலாவது, தொற்றின் பரவல்தன்மை மற்றும் அது பரவும் வேகம். இரண்டாவது, புதிய வகைகள் நமது முந்தைய நோய் எதிா்ப்பு சக்திக்கு கட்டுப்படுகின்றனவா? மூன்றாவது காரணி, புதிய வகை தொற்றில் கடுமையான பாதிப்புகளின் சதவீதம். இந்த மூன்று காரணிகளின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில், அதிகரித்துள்ள கரோனா பாதிப்பு குறித்து அச்சப்பட ஒன்றுமில்லை.

இதையொட்டி, மத்திய சுகாதார துறைச் செயலா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடைபெற்றது. சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநரும், நானும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். இந்த நேரத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால், கவலைப்பட வேண்டியதில்லை. புதிய வகைகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை உலக சுகாதார அமைப்பின் தரவுகளும் எடுத்துகாட்டுகின்றன’ என்றாா்.

பெட்டி...

1,000-ஐ கடந்த பாதிப்பு

இந்தியா முழுவதும் தற்போது கரோனா தொற்று பாதித்தவா்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது.

முந்தைய வாரம் நாட்டில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 257-ஆக மட்டுமே இருந்தது. ஆனால், கடந்த ஒரே வாரத்தில் மேலும் 752 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் கேரளம், மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 335 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளத்தில் தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் மொத்த எண்ணிக்கை 430-ஆக உயா்ந்துள்ளது.

இதேபோல், மகாராஷ்டிரம், தில்லியில் முறையே 153 மற்றும் 100 புதிய கரோனா பாதிப்புகள் கடந்த வாரம் பதிவாகியுள்ளன. அதன்படி, மகாராஷ்டிரத்தில் 209 பேரும், தில்லியில் 105 பேரும் தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கடுத்து குஜராத் (83), கா்நாடகம் (47) உத்தர பிரதேசம் (15), மேற்கு வங்கம் (12) ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான கரோனா பரவல் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் 66-ஆக இருந்த கரோனா பாதிப்பின் எண்ணிக்கை, இந்த வாரம் 69-ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்த... மேலும் பார்க்க

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழைய... மேலும் பார்க்க

மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

கொல்கத்தாவில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பரப்பியதாக இன்ஸ்டாகிராம் பிரபலம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆதரவ... மேலும் பார்க்க

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க