செய்திகள் :

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கும் தொடர்பில்லை! மத்திய அரசு

post image

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா தடுப்பூசிகளால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக திடீர் உயிரிழப்புகள் நிகழ்வதாக செய்திகள் பரவிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவை ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் மூலம் திடீர் உயிரிழப்புகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில், கரோனா தடுப்பூசிகளுக்கும் திடீர் உயிரிழப்புகளுக்கு தொடர்பு இல்லை என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றின் ஆய்வில், இந்தியாவில் கரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பதையும், மிகவும் அரிதான நிகழ்வுகளில் மட்டுமே கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.

திடீர் மாரடைப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. வாழ்க்கை முறை, பிற நோய்கள் மற்றும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டதற்கு பிறகு ஏற்பட்ட பின்விளைவுகள்கூட இருக்கலாம்.

குறிப்பாக 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டவர்களின் திடீர் மரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. கடந்த கால தரவுகளின் அடிப்படையில் மற்றும் நிகழ்கால மரணங்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

"இந்தியாவில் 18 - 45 வயதுடையவர்களின் திடீர் மரணங்களுக்கான காரணங்கள்” என்ற தலைப்பில் ஐசிஎம்ஆரின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வு மே 2023 முதல் ஆகஸ்ட் 2023 வரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டது. அக்டோபர் 2021 முதல் மார்ச் 2023 வரை நலமுடன் இருந்த நிலையில், திடீரென்று உயிரிழந்தவர்களை மையமாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில், கரோனா தடுப்பூசிகள் திடீர் மரணங்கள் ஏற்படாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தில்லி எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து இளைஞர்களின் திடீர் மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. அதிகளவிலான மரணங்கள் மாரடைப்பால் ஏற்பட்டதாகவும், முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இல்லை எனவும் தெரியவந்துள்ளது. திடீர் மரணங்களுக்கு மரபணு மாற்றங்கள் காரணமாக இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த இரண்டு ஆய்வுகளின் முடிவில், இந்தியாவில் இளைஞர்களிடையே ஏற்படும் திடீர் மரணங்களுக்கு தடுப்பூசி காரணம் இல்லை எனத் தெரியவருகிறது. மரபணு மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறையே திடீர் மரணங்களில் அதிக பங்கு வகிக்கிறது.

கரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் தொடர்பில்லை என்பது அறிவியல்பூர்வமாக நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்துகின்றனர். ஆதாரம் இல்லாத ஊகங்கள், கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றும் தடுப்பூசி மீதான மக்களின் நம்பிக்கையை குறைக்கும் அபாயம் உள்ளது. இது பொது சுகாதாரத்தை மோசமாக பாதிக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பஹல்காம் தாக்குதலுக்கு க்வாட் தலைவர்கள் கண்டனம்!

The matter of sudden unexplained deaths has been investigated through several agencies in the country. These studies have conclusively established that there is no direct link between COVID 19 vaccination and the reports of sudden deaths in the country.

எரிபொருள் தடை நடுத்தர வர்க்கத்தினர் மீதான தாக்குதல்: பாஜகவை சாடிய சிசோடியா!

பாஜக தலைமையிலான தில்லி அரசு நடுத்தர வர்க்கத்தினர் மீது தாக்குதல் நடத்திவருவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். தலைநகரில் பயன்படு... மேலும் பார்க்க

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: கனரா வங்கியைத் தொடர்ந்து மற்றொரு வங்கி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை; அதற்கு விதிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது.ப... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானார் சத்யேந்தர் ஜெயின்!

தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விரிவுபடுத்துவதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில் விசாரணைக்காகத் தில்லி முன்னாள் அமைச்சரும், ஆத் ஆத்மி தலைவருமான சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத்... மேலும் பார்க்க

தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?

மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கணவரைக் கொலை செய்த சம்பவத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்ட பிகார் பெண், தனது கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் நடந்தேறியிருக்கிறது.பிகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத... மேலும் பார்க்க

டெலிவரி ஏஜெண்ட் போல நுழைந்து பாலியல் வன்கொடுமை! செல்ஃபி எடுத்து மிரட்டல்!

புணேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் செல்ஃபி எடுத்து, இதுகுறித்து யாரிடமாவத... மேலும் பார்க்க

அமர்நாத் யாத்திரை தொடக்கம்: புறப்பட்டது 2வது குழு!

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கிடையே அமர்நாத் யாத்திரை கோலகலமாக இன்று(ஜூலை 3) முதல் தொடங்கியுள்ளது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ள அமா்நாத் குகைக் கோ... மேலும் பார்க்க