செய்திகள் :

கர்நாடகத்தில் தொடரும் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை!

post image

கர்நாடகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் வானிலை ஆய்வு மைம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பிதர் மாவட்டத்தின், அவுரத் தாலுகாவிலி இரவு முழுவதும் பெய்த மழையால் பால்கி தாலுகாவில் உள்ள படல்கான்-சோண்டிமுகேட்டில் உள்ள தாதகி பாலம் உள்பட பல பாலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. இதனால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

அவுரத் தாலுகாவில் உள்ள நாராயண்பூர் கிராமத்தில் உள்ள ஒரு ஓடையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதர் துணை ஆணையர் ஷில்பா சர்மா பாதுகாப்பு நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார்.

தட்சிண கன்னடா மாவட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த நிலையில், மங்களூரு, புத்தூர், முல்கி, மூட்பித்ரி, உல்லால் மற்றும் பன்ட்வால் தாலுகாக்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள் உள்பட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.

தாழ்வான பகுதிகள், ஏரிகள், கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளில் இருந்து குழந்தைகள் விலகி இருப்பதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்க எச்சரிக்கப்பட்டுள்ளது. நோடல் அதிகாரிகள் விழிப்புடன் இருக்கவும், பொதுமக்களின் புகார்களுக்கு பதிலளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், மேலும் தாசில்தார்களும் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரு வானிலை ஆய்வு மையம், அடுத்த மூன்று மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்று வீசும். லேசானது முதல் மிதமான மழை, இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

தட்சிண கன்னடா, உடுப்பி, விஜயபுரா, பாகல்கோட், கலபுரகி மற்றும் பிதார் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்காலிக மின் தடைகள், போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் பலவீனமான மரக்கிளைகள் வேரோடு சாய்வதற்கு வாய்ப்புள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், மின் சாதனங்களைத் துண்டிக்கவும், மரங்கள் அல்லது நீர்நிலைகளிலிருந்து பாதுகாப்பான இடத்தில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், மங்களூரு ஆந்திரத்தில் 106.6 மிமீ, கடக்கில் 70.1 மிமீ, பெங்களூரு எச்ஏஎல் ஏபியில் 28.2 மிமீ, சித்ரதுர்காவில் 14.8 மிமீ, கலபுரகியில் 10.4 மிமீ மற்றும் பெங்களூரு நகரில் 4.9 மிமீ மழை பெய்துள்ளது. அகும்பேயில் 108.5 மிமீ, விஜயபுராவில் உள்ள திடகுண்டியில் 46.5 மிமீ மற்றும் மங்களூருவில் 33 மிமீ என பதிவாகியுள்ளன. கர்நாடகா முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அடுத்த சில மணி நேரங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் காற்றுடன் கூடிய இடைவிடாத மழை தொடரக்கூடும் என்று ஐஎம்டி எச்சரித்துள்ளது.

Heavy rains lashed several parts of Karnataka on Thursday morning, leading to the IMD issuing orange and yellow alerts in various districts, holiday for educational institutions and authorities taking precautionary measures across multiple districts.

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பிகார் மாநிலம் தர்பங்காவில் நடைபெற்ற வாக்காளர் அதிகார யாத்திரைக் கூட்டத்தில், அடையாளம் தெரியாத நபர், பிரதமர் மோடி குறித்து அவதூறான கருத்துகளைக் கூறிய விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகியிர... மேலும் பார்க்க

பாதுகாப்பின்மை குறித்த அச்சத்தில் 40% கிராமப் பகுதி பெண்கள் - ஆய்வு

பெண்களின் பாதுகாப்புக் குறித்த நாரி 2025 என்ற ஆய்வு முடிவு, புகார் அளிக்க முடியாத, எண்ணற்ற துன்புறுத்தல்களுக்கு பெண்கள் ஆளாவதாகவும், அது பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம் என்றும் தெரிவித்து... மேலும் பார்க்க

ஜம்முவில் ஆக. 30 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை காரணமாக ஆக.30 வரை ஜம்முவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்முவில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளத... மேலும் பார்க்க

பிகாருக்குள் நுழைந்த பயங்கரவாதிகள்? உச்சகட்ட கண்காணிப்பில் காவல்துறை

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூன்று பேர் பிகாருக்குள் நுழைந்திருப்பதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் வரப்பெற்றதையடுத்து, உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.தேரதல் நடைபெறவிருக்கும் நில... மேலும் பார்க்க

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும்: காங்கிரஸ்

மணிப்பூரில் புதிதாகத் தேர்தல் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி சப்தகிரி சங்கர் உலகா கோரிக்கை விடுத்துள்ளார். இம்பாலில் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரணியில் அவர் பேசினார்.... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரம் மாநிலம் பால்கர் மாவட்டத்தில், 4 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததில் பலியானோரது எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. பால்கர் மாவட்டத்தின், விஜய் நகர் பகுதியில் அமைந்திருந்த ... மேலும் பார்க்க