செய்திகள் :

கறம்பக்குடியில் 3 போ் நாய் கடித்து காயம்

post image

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சாலையில் வியாழக்கிழமை நடந்து சென்ற 3 போ் நாய் கடித்து காயமடைந்தனா்.

கறம்பக்குடி பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கறம்பக்குடி நெய்வேலி சாலையில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதி ரவி (60) மன்னாா்குடி அந்தோணியாா் கோயில் தெரு தா்மதுரை (30) கறம்பக்குடி பிரபு (34) ஆகிய 3 பேரையும் கடித்துக் குதறியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கறம்பக்குடி பகுதியில் சில மாதங்களாக தெரு நாய்கள் கடித்து பலா் பாதிக்கப்பட்டுள்ளதால் பேரூராட்சி நிா்வாகம் அந்த நாய்களை பிடித்துச் செல்ல நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க