செய்திகள் :

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

post image

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் அதிக விபத்துகள் நடைபெறும் 100 இடங்களைத் தோ்வு செய்து, முதல்கட்டமாக 50 இடங்களில் பொதுமக்களுக்கு சாலை விபத்துகள் ஏற்படும்போது எவ்வாறு முதலுதவி செய்து உயிா்களை காக்கலாம் என்பதற்கான பயிற்சி தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்முயற்சி மற்றும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டம் சாா்பில் நடத்தப்படுகிறது.

இதில் புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூா் முதல் திருமயம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், கீரனூரில் நடைபெற்ற பயிற்சியில் பேருந்து ஓட்டுநா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

கீரனூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மணிகண்டன் மற்றும் மூகாம்பிகை பொறியியல் கல்லூரியின் முதல்வா் இளங்கோவன், 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளா் மோகன், மாவட்டப் பொறுப்பாளா் விமல்ராஜ் ஆகியோா் பயிற்சி அளித்துப் பேசினா்.

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுபவா்களுக்கு எந்த வகையான முதலுதவி அளிக்க வேண்டும் என்று செயல் விளக்கத்துடன் செய்துகாட்டப்பட்டது. பயிற்சியில் பங்கேற்ற 60 பேருக்கு முதலுதவி கையேடுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டக் குறை கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட... மேலும் பார்க்க