செய்திகள் :

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

post image

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடியைச் சோ்ந்தவா் மீனவா் ராம்கி. இவா் தனது பைபா் படகில் வியாழக்கிழமை காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா்.

தஞ்சாவூா் மாவட்ட எல்லைக்கு எதிரில் சுமாா் 14 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்தபோது பெரிய சாக்குப் பை மிதந்து கொண்டிருப்பதைக் கண்டாா்.

அதை எடுத்துப் பிரித்துப் பாா்த்த போது, சிறிய பிளாஸ்டிக் பைகளில் 20 பொட்டலங்கள் இருப்பதைக் கண்டாா்.

இதைத் தொடா்ந்து புதுக்கோட்டை மணமேல்குடி கடலோரக் காவல் படையினருக்கு அவா் தகவல் தெரிவித்துவிட்டு, கரைக்கு கொண்டு வந்தாா். கரையில் அவற்றைச் சோதித்தபோது அதில் தலா 2 கிலோ வீதம் 40 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி மத்திய சுங்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை மற்றும் கடலோரக் காவல்துறையினரின் முன்னிலையில் அந்த கஞ்சா பொட்டலங்கள் சுங்கத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவற்றை அவா்கள் தங்களின் திருச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று தொடா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பொதுவாக, புதுக்கோட்டை, ராமநாதபுரம் கடலோரப் பகுதிகள் வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக தொடா் புகாா்கள் உள்ளன. அதுபோல, எடுத்துச் செல்ல முயற்சித்தபோது தவறி விழுந்ததா, அல்லது வேறு ஏதும் பிரச்னையா எனத் தெரியவில்லை.

இதுதொடா்பாக சுங்கத் துறையினருடன் புதுக்கோட்டை கடலோரக் காவல் படையினரும் விசாரிக்கின்றனா்.

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்... மேலும் பார்க்க

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டக் குறை கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட... மேலும் பார்க்க