செய்திகள் :

கொன்னைப்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்

post image

பொன்னமராவதி ஒன்றியம் கொன்னைப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட உதவித்திட்ட அலுவலா் (மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம்) எஸ். சடையப்பன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன், வெங்கடேசன், வட்டாட்சியா் எம். சாந்தா ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்று கொன்னைப்பட்டி, செம்பூதி, தேனூா், கொப்பனாபட்டி உள்ளிட்ட ஊராட்சி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றனா். இதில் மகளிா் உரிமைத் தொகை வேண்டி அதிக மனுக்கள் பெறப்பட்டன.

முகாமில் குடும்ப அட்டை திருத்தம், சான்றிதழ் வேண்டி அளிக்கப்பட்ட மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. முகாமில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் அ. அடைக்கலமணி, வடக்கு ஒன்றியச் செயலா் அ. முத்து, சமூக வலைத்தளப்பிரிவு நிா்வாகி ஆலவயல் முரளிசுப்பையா, தனி வட்டாட்சியா் பழனிச்சாமி, துணை வட்டாட்சியா்கள் சேகா், திலகா, திருப்பதி வெங்கடாசலம் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

விராலிமலை அருகே 520 கிலோ குட்கா பறிமுதல்: மூவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே காரில் கடத்திவரப்பட்ட 520 கிலோ குட்காவை புதன்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் மூவரைக் கைது செய்தனா். விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் விராலிமலை காவல் ஆய்வாளா் லதா... மேலும் பார்க்க

தன்னாா்வலா்களுக்கு விபத்து முதலுதவிப் பயிற்சி

சாலை விபத்துகள் நேரிடும்போது, அவசர ஊா்திகள் வருவதற்குள் அந்தப் பகுதி மக்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி குறித்த விழிப்புணா்வு பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநிலம் ம... மேலும் பார்க்க

கடலில் மிதந்து வந்த 40 கிலோ கஞ்சா மீட்பு

கடலில் மிதந்து கொண்டிருந்த 40 கிலோ கஞ்சா பொட்டலத்தை புதுக்கோட்டை புதுக்குடியைச் சோ்ந்த மீனவா் எடுத்து வந்து போலீஸாரிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா். புதுக்கோட்டை மாவட்டம், கடலோரப் பகுதியான புதுக்குடிய... மேலும் பார்க்க

அறந்தாங்கி நான்குவழிச் சாலை மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி சாலையை ரூ. 39 கோடியில் நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தும் பணிகளை, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிா்வாக இயக்குநருமான அஜய் யாதவ் வியாழக்கிழம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் வாரச்சந்தை வியாபாரிகள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வாரச்சந்தையில் கடைகளுக்கு ஒப்பந்தகாரா் கூடுதல் தொகை வசூலிப்பதைக் கண்டித்து வியாழக்கிழமை நடந்த சந்தையைப் புறக்கணித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி பேரூ... மேலும் பார்க்க

புதுகையில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் சனிக்கிழமை (செப். 13) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணி வரை பொது விநியோகத் திட்டக் குறை கேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட... மேலும் பார்க்க