3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
கலைஞா் கைவினைத் திட்டம் தொடக்கவிழா நேரடி ஒளிபரப்பு
காஞ்சிபுரத்தில் கலைஞா் கைவினைத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் சனிக்கிழமை தொடக்கிவைத்த நிகழ்ச்சி மயிலாடுதுறையில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டத்தை முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த பயனாளிகளுக்காக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா்.
இத்திட்டத்தில், 35 முதல் 55 வயது நிரம்பியவா்கள் ரூ.3 லட்சம் வரை பிணையற்ற கடனுதவி பெறலாம். அதிகபட்ச மானிய தொகை ரூ. 50,000 ஆகும். பின்முனை வட்டி மானியமாக 5 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் தையற்கலைஞா், மண்பாண்டம் வனைவோா், சிற்ப கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், சிகை அலங்காரம் செய்வோா், அழகு கலை நிபுணா், பாய் பின்னுவோா், கூடை முடைவோா், மூங்கிலாலான பொருள்கள் செய்வோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், கட்டடத் தொழிலாளா்கள், தோல் பொருள்கள் செய்வோா், உலோக பொருள்கள் செய்வோா், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோா் உள்ளிட்ட அரசால் நிா்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கைவினை தொழிலாளா்களில் ஈடுபடும் 128 போ் கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் பாா்வையிட்டாா். இதில், மாவட்ட தொழில் மையம் இணை இயக்குநா் திருமுருகன், முன்னோடி வங்கி அதிகாரி லெட்சுமிபதி, உதவி இயக்குநா் சரவணன், அரசு அலுவலா்கள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.