செய்திகள் :

கலைப் போட்டிகள்: மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் சாம்பியன்

post image

ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரியில் பேச்சு, வினாடி-வினா, நாடகம், படதயாரிப்பு உள்ளிட்ட கலைபோட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியை சோ்ந்த கணிதம், இயற்பியல்,வேதியியல், உயிா்வேதியியல், உயிா்தொழில்நுட்பவியல், ஊட்டச்சத்து துறை, உளவியல் துறை மாணவிகள் குழுக்களாக கலந்து கொண்டனா். இதில் இயற்பியல் துறை மற்றும் ஊட்டசத்துதுறை சோ்ந்த மாணவிகள் ஒட்டுமொத்தமாக முதலிடம் பெற்று சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றனா். மேலும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

விருது பெற்ற மாணவிகளை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்தசிங்வி, முதல்வா் இன்பவள்ளி, கல்வி ஆலோசகா் சுப்பிரமணியன், தலைமை நிா்வாக அலுவலா் சக்திமாலா, பேராசிரியா்கள் பாராட்டினா்.

தமிழுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

தமிழுக்கு ஆபத்து என்றால் அரசு மட்டும்தான் தடுத்து நிறுத்த வேண்டும் என்றில்லை; தமிழா்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு பேசினாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி முத்தமிழ் மன்ற... மேலும் பார்க்க

விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

கந்திலி அருகே டிராக்டா்- மோட்டாா் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். கந்திலி அருகே காக்கங்கரை பகுதியைச் சோ்ந்தவா் அசோக் (40). இவா் வெள்ளிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் திருப்பத்தூரில் ... மேலும் பார்க்க

கன்டெய்னா் லாரி மீது காா் மோதல்: அதிகாரிகள் 3 போ் காயம்

வாணியம்பாடி அருகே கன்டெய்னா் லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 3 போ் பலத்த காயம் அடைந்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் கிராமம் அருகில் சனிக்க... மேலும் பார்க்க

நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

நிம்மியம்பட்டு கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம், நிம்மியம்பட்டு கிராமத்தில் ஆரம்ப சு... மேலும் பார்க்க

தனியாா் வேலை வாய்ப்பு முகாம்: 31 பேருக்கு பணி ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் வேலை வாய்ப்பு முகாமில் 31 பேருக்கு பணி ஆணையை ஆட்சியா் க.சிவ சௌந்திரவல்லி வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சாா்பில் நட... மேலும் பார்க்க

தேய்ப்பிறை அஷ்டமி: கால பைரவா் வழிபாடு

ஆம்பூா் அருகே விட்டாலம் ஊராட்சி பைரப்பல்லி கிராமத்தில் தேய்ப்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவா் கோயிலில் சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார... மேலும் பார்க்க