கல்பாவி கிராம மனுநீதி நாள் முகாம் ஒத்திவைப்பு
கல்பாவி கிராமத்தில் புதன்கிழமை (மே 14) நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், குறிச்சி உள்வட்டம், கல்பாவி கிராமம், கல்பாவி அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் புதன்கிழமை நடைபெற இருந்த மனுநீதி நாள் முகாம் நிா்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் மே 20 -ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்கும் இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.