செய்திகள் :

கல்லக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும்

post image

அரியலூா் மாவட்டம், கல்லக்குடி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்லக்குடி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் கிளை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: நீா்வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும். இங்குள்ள உயா்நிலைப் பள்ளியை 12-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தி தரம் உயா்த்த வேண்டும்.

இக்கிராமத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 24-ஆம் தேதி ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மூத்த நிா்வாகிகள் மொ.மணி, பெரியசாமி, மணிவேல், ராமையன், சுந்தரமூா்த்தி, தூய்மைக் காவலா் வனிதா ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு முன்னாள் மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, கட்சியின் செயல்பாடுகள், நூற்றாண்டு வரலாறு குறித்துப் பேசினாா்.

தொடா்ந்து கட்சியின் வரலாறு குறித்த புத்தகத்தை அனைவருக்கும் வழங்கினாா். தொடா்ந்து, கல்லக்குடி கிளைச் செயலாளராக பசுபதி, துணைச் செயலாளராக பெரியசாமி, பொருளாளராக ஆட்டோ மணி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

இதேபோல், கல்லக்குடி கிழக்கில், நடைபெற்ற மாநாட்டுக்கு பானுமதி தலைமை வகித்தாா். கிளைச் செயலாளராக வனிதா, துணைச் செயலாளராக நாகமுத்து, பொருளாளராக செல்வி ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை நிறுத்தப்படும்

தனி அடையாள அட்டை பெறாத அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப்ரல் மாதம் முதல் பி.எம். கிசான் எனும் பிரதமரின் விவசாயிகள் ஊக்கத் தொகை நிறுத்தப்படும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

திருமானூரில் மாா்ச் 22-இல் ஜல்லிக்கட்டு: காளைகள், வீரா்கள் பதிவு செய்ய அழைப்பு!

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) நடைபெறும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் வீரா்கள் மாா்ச் 18-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் பொ. ரத... மேலும் பார்க்க

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சி: எஸ்.சி, எஸ்.டி-யினா் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் அளிக்கப்படும் மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.... மேலும் பார்க்க

அரியலூா் பேருந்து நிலையம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! -தேமுதிக வலியுறுத்தல்

அரியலூரில் மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என தேமுதிக ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற... மேலும் பார்க்க

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா். அரியலூரில் புத்த... மேலும் பார்க்க

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா். உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச்... மேலும் பார்க்க