கல்லாமொழி, குலசை, மணப்பாடு பகுதியில் நாளை மின் தடை
கல்லாமொழி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு பகுதியில் புதன்கிழமை (ஜூன் 25) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருச்செந்தூா் கோட்டத்துக்குள்பட்ட கல்லாமொழி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவி ருப்பதால் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை ஆலந்தலை, கல்லாமொழி, கந்தசாமிபுரம், கணேசபுரம், சுனாமிநகா், சூசைநகா், குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, நா.முத்தையாபுரம், மறவன்விளை, நாலுமூலைக்கிணறு, போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.