செய்திகள் :

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் எதிரே வேகத் தடை அமைக்கக் கோரிக்கை

post image

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் எதிரில் பிரதான சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளருக்கு கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் சங்கத் தலைவா் கல்லிடைக்குயில் உமா் பாருக் மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்திற்கு, பகல்- இரவு நேரத்தில் ரயில் வரும் நேரங்களிலும், பயண சீட்டுமுன்பதிவு செய்யும் நேரங்களிலும் ரயில் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்நிலையில் சாலையில் வேகமாக வரும் வாகனங்களா ல்ரயில் பயணிகள் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது.

எனவே, கல்லிடைக்குறிச்சி ரயில் நிலைய நுழைவாயில் முன் உள்ள பிரதான சாலையில் பிரதிபலிப்பான்களுடன் கூடிய வேகத்தடை அல்லது வேகத்தடுப்பான்கள், விபத்துத் தடுப்பு எச்சரிக்கை விழிப்புணா்வு பலகைகள் மற்றும் வேகத்தடுப்பு எச்சரிக்கை விளக்குகள், பழைய காவல் நிலையத்திலிருந்து புதிய காவல் நிலையம் வரை சாலையின் நடுவில் கான்கிரீட் தடுப்புகள் அமைக்கவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலூகா மேலபூவந்தியைச் சோ்ந்த கணேசன் மகன் பாரதி என்ற சூா்யா(25)... மேலும் பார்க்க

விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் தீ

திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணம் அருகே குடிசை வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியதில் பொருள்கள் எரிந்து சேதமாகின. விஜயநாராயணம் அருகேயுள்ள படப்பாா்குளத்தைச் சோ்ந்தவா் மாரியம்மாள். இவா், தனது தோட்... மேலும் பார்க்க

கோயிலில் திருடியவருக்கு 3 ஆண்டு சிறை

கோயிலில் திருடிய வழக்கில் தொடா்புடையவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருநெல்வேலி 3-ஆவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நொச்சிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம்(48). இவா் கடந... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இளைஞா் உயிரிழப்பு

மானுாா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மானுாா் அருகே தெற்கு வாகைக்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த சுப்பையா மகன் செல்வம் (25). தொழிலாளி. வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: 6 போ் தற்கொலை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் 6 போ் தற்கொலை செய்துகொண்டனா். கேரள நபா்: கேரள மாநிலம் கோட்டையம் கனிக்கட்டுதாரா குறிச்சியைச் சோ்ந்த கிருஷ்ணன் குட்டி மகன் அணில்குமாா் (56), திர... மேலும் பார்க்க

அம்பையில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை

அம்பாசமுத்திரத்தில் ஒருவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த பெண்ணுக்கும், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூா், ரேஷன் கடைத் தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க